Originally Posted by
M.Jagadeesan
அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற அறுசுவை உணவைவிடச் சிறந்தது
தேவர்கள் உண்ணுகின்ற அமுதத்தைவிட உயர்ந்தது
சொந்த உழைப்பிலே வந்த கூழ். !
குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
யாழோசை என்காதில் வேம்பாய்க் கசந்ததடா !
கண்ணே ! உன் மழலையிலே காதுகள் இனித்ததடா !
பீரங்கிக் குண்டுகளாலும் பிளக்க முடியாக் கோட்டையிது !
கவசம்போல் உடனிருந்து காக்கின்ற கருவியிது !
அதுவே அறிவு என்னும் அற்புதப் பொருளாகும் !
கங்கையிற் குளித்தாலும் தொலையாத கருமத்தைக்
காசேதும் செலவின்றித் தொலைப்பதற்கு வழியுண்டு.
- உண்மை பேசு.
நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
-காதல்
நோயும் தந்து அதற்குரிய
மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
- காதலி
ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
அதிக ஒளியைத் தருவது
-உண்மை.
வரும்போது ஒவ்வொன்றாக வந்து
போகும்போது சேர்ந்தே போகும் !
-செல்வம்.
.
Bookmarks