இந்த வருட ஐபிஎல்லில் சற்று சுரத்து குறைவாய் இருப்பதைப் போன்ற தோற்றம் இருக்கிறது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வி ஆரம்ப கொண்டாட்டங்களை முடக்கி விட்டது என்று சொன்னாலும், தெளிவான கதா நாயகர்கள் இன்னும் வெளிப்படாதது ஆச்சர்யம்தான்.
நெஹ்ராவும், தஹிரும் பந்துவீச்சில் பிரஹாசித்தாலும், ரஹானே, ஸ்மித், மெக்கல்லம் போன்றோர் சற்று அதிக ஓட்டங்கள் குவித்தாலும் முந்தைய ஆண்டுகளின் விறுவிறுப்பு குறைந்துவிட்டது.
ஒரு நண்பர் கேட்டார், பஞ்சாப் - ராஜஸ்தான் சூப்பர் ஓவரின் போது பார்த்தால் எல்லாம் வெளி நாட்டு வீரர்கள்.
ராஜஸ்தான் சார்பில் பந்து வீசியது கிறிஸ் மோரிஸ்.. பஞ்சாப் சார்பில் மிச்சல் ஜான்சன்
ராஜஸ்தான் சார்பில் மட்டை பிடித்தது வாட்சன், ஸ்மித், ஃபால்க்னர்
பஞ்சாப் சார்பில் மட்டை பிடித்தது மேக்ஸ்வெல் மற்றும் மார்ஷ்
இதில் கிறிஸ் மோரிஸ் மட்டும் தென்னாப்பிரிக்க வீரர். மற்றவர்கள் அனைவருமே ஆஸ்திரேலியர்கள்..
இது இந்தியன் பிரீமியர் லீக் போல தோற்றமளிக்கவில்லை. ஆஸ்திரேலியன் பிரீமியர் லீக் போல இருக்கிறது.
சரி அதை விடுவோம்.
புள்ளிப் பட்டியலின் உச்சியில் இருப்பது ஆர்பாட்டமில்லாத ராயல்ஸ் அணி.
புள்ளிப்பட்டியலில் அட்வாரத்தில் புதைந்து கிடப்பது ஆரவாரமான மும்பையும், பெங்களூரு அணியும்..
பந்து வீச்சில் தஹிரும் நெஹ்ராவும் எதிர்பாராத விதமாய்.. பிரகாசிக்கிறார்கள்.
மட்டையடில் ரஹானே, ஸ்மித், மெக்கல்லம் என சிலர் பிரகாசித்தாலும் திடீரென ஹர்பஜன், பொலார்ட் போன்றவர்கள் சற்றே வீரம் காட்டினாலும் விறுவிறுப்பில்லை.
இதே போக்கில் போனால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியன் போரிங்க் லீக் என மாற்ற வேண்டியதாகி விடுமோ என சந்தேகமாக இருக்கிறது.
ஐபிஎல்லைப் பற்றி இங்கே பேசலாம் வாங்க..
Bookmarks