மன்ற நண்பர்களுக்கு வணக்கம்.
என் திருமண அழைப்பிதழில் அச்சிட, ஒரு வெண்பா எழுத முயன்றுள்ளேன். எனக்கு மிக அடிப்படையான இலக்கண அறிவே உள்ளது.
இதில் ஏதேனும் பிழை இருப்பின், திருத்தி உதவுங்கள்.
"பொன்னெழிலாள் இதழுதிரும் புன்னகையும் நிலைபெறவே
மன்னனவன் இன்னலின்றி மகிழ்வுடனே வாழ்ந்திடவே
இந்திரனும் ஈஸ்வரனும் இவர்களினும் பெருமக்கள்
வந்திருந்து வாழ்த்தருளிச் செல்க..."
இது நேரிசை வெண்பா ஆகும்.
முதல் மூன்று அடிகளும் நந்நான்கு சீர்களும்,
இறுதி அடி மூன்று சீர்களும்,
ஒவ்வொன்றும் காய்ச் சீராகவும் (இறுதிச் சீர் மட்டும் நாள் மலர் காசு பிறப்பு எனும் அடிப்படியில் உள்ளது),
முதல் இரண்டாம் அடிகள் மற்றும் மூன்றாம் நான்காம் அடிகளில் முதற்சீர் எதுகையும்
ஒவ்வொரு அடியிலும் முதற்சீரும் மூன்றாம் சீரும் மோனையாக
பெற்று அமைத்துள்ளேன்...
பொருள் மிகவும் நேரடியாகவே அமைந்துள்ளது..
இதில் பிழை இருப்பின் கோபம் கொள்ள வேண்டாம்.
பிழை திருத்தம் செய்து உதவுங்கள்.
நன்றி..
Bookmarks