இன்று ஒரு உருவத்திற்கு
வடிவம் கொடுத்தாக வேண்டிய
கட்டாயத்தில் அமர்ந்ததால்
எனது கரிக்கோலின் நுனி
சிதறி கிடக்கிறது
சிதறல்களை
ஒருங்கிணைத்த வேளை
சின்னஞ்சிறிய பல உருவங்கள்
தன்னைத் தானே
காட்சிப் படுத்தியதில்
எனது உருவமும்
இல்லாமல் இல்லை....