Results 1 to 3 of 3

Thread: மீண்டும் சிரிக்க மணமில்லை...

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2008
    Location
    tamilnadu
    Age
    41
    Posts
    98
    Post Thanks / Like
    iCash Credits
    28,721
    Downloads
    9
    Uploads
    0

    மீண்டும் சிரிக்க மணமில்லை...

    ஒரு
    தேவதையை
    தொலைத்ததாய் தேடுகிறான்..
    பேரலையில் சிக்கி அழும்
    கட்டுமரம்போல.....

    எட்டிவிடுவான்
    அவளை ...

    வானம் முழுக்க
    தேவதையென்றாலும்,
    கட்டுமரத்துக்கு
    சிறகுகள் முளைக்குமெனில்....?

    எண்ணங்கள்
    காற்றில் மிதந்தாலும்,
    உடலை விட்டு
    உயிர் பிரியுமெனில்....?

    அவளை
    தேடிக்களைத்த மணம்
    ஓய்ந்து கிடந்தது
    பாத்த்திற்கு கீழே..
    உலகமே படுக்கையானபின்
    நடக்க விழைவேது ..

    அளவாய் சிரித்து
    குறைவாய் பேசி
    முழுதாய் கொன்றதால்
    உறவுகள் களைத்தபின்
    சித்தனென்பார்கள்...
    பித்தனென்பார்கள்...
    உலக பேச்சுக்களின் அசுரத்தனம்...

    ஒருநாள் சிரித்தான்
    உண்மையாக ..
    அவள்
    எங்கோ இருக்கிறாள்...

    மீண்டும் சிரிக்க
    மணமில்லை...

    பைத்தியமென்றார்கள்
    பேசாமல் கிடந்தால்..
    சோம்பேரி என்றார்கள்
    படுத்துக்கிடந்தால்..
    உலகத்துடன்
    தோல்வியில்லை..
    பிச்சைகாரனில்லை..

    நடந்துகொண்டே இருக்கிறான் ..

    தேவதைகளை தேடவில்லை
    தேவைகளை தேடவில்லை
    பந்தங்களை தேடவில்லை
    பாதைகளையும் தேடவில்லை ...

    போகும் வழியெங்கும்
    ஞானியாகிவிட்டான்..
    குறுநிழலில் குடும்பம் அமைத்து
    நிம்மதிக்காய்
    கடவுளை தேடும்
    சம்சாரிகளிடையே.....

    நிற்கவும் தோன்றவில்லை ..
    பேசவும் ஆசையில்லை ...

    இனி பயணங்களில்
    ஒளிந்துகொள்ளவும்
    இடம் கிடைக்கப்போவதில்லை...

    அவள் கிடைத்தாலும்,
    கனிந்து அனைத்தாளும்.......
    "உன்னை விட திறமைசாலி யாரும் இல்லை"எனும்போது உன்னை விட புத்திசாலிகள் நிச்சயம் உண்டு.

  2. Likes dellas liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    Quote Originally Posted by kulirthazhal View Post
    குறுநிழலில் குடும்பம் அமைத்து
    நிம்மதிக்காய்
    கடவுளை தேடும்
    சம்சாரிகளிடையே.....
    வீரிய வரிகள்...
    அற்புதமான வரிகளின் கவிதை!
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

  4. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    மனம்?
    மணம்?

    ஒன்று நெஞ்சு, நினைவு
    ஒன்று வாசம் , கல்யாணம்

    எதைச் சொல்றீங்க தலைப்பில் குளிர்தழல்.?
    காதல் தோல்வி கவிதை என்ற வகையில் சொல் அமைப்பில் விறு விறு. பாராட்டுக்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •