Results 1 to 6 of 6

Thread: கண்கள் பெற்றபயன் எது ?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    கண்கள் பெற்றபயன் எது ?

    கண்கள் பெற்றபயன், இருவர்
    ...காதல் செய்யவே என்றார்
    கண்கள் பெற்றபயன், வள்ளுவன்
    ...கல்வி கற்கவே என்றான்
    கண்கள் பெற்றபயன், திண்ணன்
    ...கண்ணை அப்பவே என்றான்
    கண்கள் பெற்றபயன்,இவற்றுள்
    ...எதுசரி எனச் சொல்வீரே !



    திண்ணன் -கண்ணப்பன்
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. Likes barath liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    கண்னொற்றிக்காதல் செய்தார் பெற்றார் பெண்மகவு பின்
    கன்னிகாதானம் தந்தார் பெற்றார் தாத்தாவென்றபட்டம்!

    கல்வியெனும் அகக்கண் பெற்றார் பெற்றார் அறிவாளிப்பட்டம் பெற்றதாலே
    பெற்றோர் பெற்றார் அருந்தவத்தாலே நன்மகவு பெற்றார்யென்ற பட்டம்!

    முக்கண்பெற்ற அப்பனுக்கே முன்னால் காலாலுதைத்தே கண்னப்பியதாலே
    திண்ணப்பர் பெற்றார் கண்ணப்ப நாயனார்யென்ற பட்டம்! - இதுவே சரியென்று

    முன்பின்தெரியாத முனுசாமிக்கு கண்தெரிய கண்தானம் கொடுத்தநம்
    கண்ணபிரானோ மேலோர் எனும் பட்டம் பெற்றார் மேலுலகு போனபின்னும்!

    அதுவும் சரிதான்! ஆதலினாலே கண்தானம் செய்வீரே உலகத்தீரே!
    என்றென்றும் நட்புடன்!

  4. Likes ரமணி liked this post
  5. #3
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    32
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0
    கண்கள் பெற்ற பயன் கல்வி கற்பதே என கருதுகிறேன் ஐயா.
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

  6. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கண்கள் இல்லாமலும் காதல் செய்ய இயலும், நாம் இறந்த பிறகு , நம்முடைய கண்களைப் பிறருக்குத் தானமாகக் கொடுக்கமுடியும் ஆனால் நாம் வாழும் காலத்தில் கல்வி கற்க கண்கள் மிகவும் இன்றியமையாதன. ஆகவே கண்கள் பெற்றபயன் கல்வி கற்க என்பதே பொருத்தமான விடையாக இருக்கமுடியும்.




    சபீக்ஷனா மற்றும் பிள்ளையவர்களின் பாராட்டுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    காதலுக்கு கண்ணில்லை.. கண்கள் பெற்ற பயன் காதலில்லை.
    கண்தானம், நாம் உபயோகித்த பின் கொடுக்கும் தர்மம். அது கண்ணைப் பெற்ற பயனாகாது. அது வீணடிக்காத சிக்கனமாகும்

    கல்வியே கண்கள் பெற்ற பயன். இதை யோசிக்கக் கூட கல்விதானே தேவைப்படுகிறது.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    என்னையெல்லாம் கேட்டால்....

    கண்கள் பெற்ற பயன்... இந்த உலகைப் பார்க்க, ரசிக்க.... கல்வி கற்கவும் நாம் ”பார்க்க”வேண்டியிருக்கிறது அல்லவா?
    கண்கள் இல்லையேல் இந்த உலகின் தேவதைகளை தரிசிப்பது எப்படியாம்??
    இவ்வுலகமே பூட்டிய சுவர்க்கம்,
    கண்களே அதன் திறவுகோல்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •