Results 1 to 3 of 3

Thread: பெண் என்றால் என்ன??

                  
   
   
  1. #1
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    32
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0

    பெண் என்றால் என்ன??




    அன்று நான் அன்பு கொண்டே
    உன்னில் அடைக்கலம் புகுந்தேன்- வாழ்வில்
    வென்று காட்டும் இலக்குடன்
    வந்துன் கரம் பிடித்தேன்!!

    பெற்றார் எனை தடுக்க
    உற்றார் உதவி மறுக்க
    மற்றார் மடத்தனம் என்ன
    பற்றினேன் என் பதி உன்னை!!

    தேவதை என் வாசல் வந்து
    சேர்வதை கண்ணுற்றால்
    தேவர்கள் உவந்து செல்வம்
    இறைத்திடுவர் என்றுரைத்தாய்!!

    காசு எம்மிடம்
    கடுகளவும் இருக்கவில்லை - ஆனால்
    ஆசு கண்டு - நாம்
    அடுத்தவரை கடியவில்லை!!

    கூலி வேலை நீ செய்யினும்
    குற்றம் ஒன்று கண்டிலேன்
    தாலி பூண் உன் தவக்கொடி நான்
    தவிப்பு என்றும் கொண்டிலேன்!!

    சூது பற்றி அறியாய் - பிற
    மாது பற்றியும் தெரியாய்
    ஏது உன் வாழ்வில் சிறப்பென்றால்
    என் பெயர் சொல்லும் குழந்தை நீ!!

    என்றாவது ஒரு நாள்
    எல்லோரும் வாயில் விரல் வைக்க
    வாழ்ந்திங்கு காட்டுவோம் என்று
    வைராக்கியமாய் இருந்தேன்!!

    பலர் எள்ளி நகையாடினர்
    என் வாழ்வின் நிலை கண்டு
    எள்ளளவும் கலங்கவில்லை - ஏனென்றால்
    என் இரு கண்களாய் நீயிருந்தாய்!!

    யார் அறிவர் கண்ணிழந்த பறவை ஒன்றை
    கானகத்தில் விட்டது போல்
    என்னையும் இறைவன் உன் கால்கள்
    பறித்து பதற வைப்பார் என்று!!

    உண்ண வழி தேடி
    என் உதிரத்தை தானம் செய்தேன்
    ஊரார் பேச்சை எல்லாம்
    உதறியே தள்ளி வைத்தேன்!!

    உலகின் மிகப்பழம் தொழிலிற்கு
    பாதை சிலர் காட்டினர்
    விலைகள் குறித்து என்னிடம்
    விடுதிகளை வினவினர்!!

    பட்டும் படாமலும்
    பலர் என்னை பரிகசித்தார்
    தொட்டும் தொடாமலும் - கயவர்
    தொல்லைகள் பல செய்தார்!!

    துவண்டு விடவில்லை நான்
    அதீத துணிவு கொண்டேன்
    பெண் என்றால் என்ன
    நான் பேதை ஒன்றும் அல்லவே!!

    பிச்சை ஏந்தும் நிலை வந்தும்
    பிரிவு ஒன்று இல்லை எமக்கு- உன்னிடம்
    தீட்சை பெற்ற சீடர் யான்
    உன்னை சுமப்பதால் என்றும் சுகமே எனக்கு!!

    எம் புனிதமான காதல் பற்றி
    புத்தகங்கள் தேவை இல்லை
    மனிதம் கொண்டு எம்மை - இவர்
    மதித்தாலே அது போதும்!!
    Last edited by Sabeekshana; 22-08-2014 at 06:06 PM.
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பெண்ணின் பெருமை பேசுகிற
    ...பெருங்கவி என்றே இதைச்சொல்வேன்
    மண்ணில் ஆண்மகன் ஒருவனுக்கு
    ...மாண்புறு மனைவி அமைந்திட்டால்
    விண்னும் அவனது வசமாகும்
    ...விதியும் அவனது சொற்கேட்கும்
    நண்ணும் துன்பம் விலகிடுமே
    ...நமனும் அஞ்சி ஓடிடுவான்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    அருமையான பெண் பெருமை பேசும் வரிகள் ..தொடரட்டும்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •