Results 1 to 4 of 4

Thread: கடவுளின் வருகையை எதிர்நோக்கிய நியாயப்படுத்தல்கள்

                  
   
   
  1. #1
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    31
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0

    கடவுளின் வருகையை எதிர்நோக்கிய நியாயப்படுத்தல்கள்



    தமிழரின் தாயகமாம் குமரி தனை
    ஆர்ப்பரித்த ஆழி பேரலை
    அள்ளி செல்கையில் நீ வரவில்லை!!

    அவல பெண்ணின் மானம் டெல்ஹியில்
    அசுரர் நால்வரால்
    அபகரிக்கப்பட்ட போது நீ வரவில்லை!!

    எங்கோ பறந்த மலேசிய விமானம்
    மதியற்ற ரஷ்யரால்
    மடக்கி வீழ்த்தப்பட்ட போது நீ வரவில்லை!!

    இஸ்ரேல் காசா யுத்தத்தில்
    இயம்பிட இயலா விபரீதங்கள்
    இருந்தும் நீ வரவில்லை!!

    துள்ளி விளையாடிய பள்ளி சிறார்- ஈழத்தில்
    துவம்சம் செய்யப்பட்டார் - குண்டுகளால்
    குருதி துடைக்க நீ வரவில்லை!!

    முப்பது வருட தமிழர் போராட்டம்
    சில மூர்க்கர்களால் மூன்றே நொடியினில்
    முற்று பெற்ற போது நீ வரவில்லை!!

    பாசுரம் பாடினேன் - பற்பல
    பணிகள் அற்றோர்க்கு புரிந்தேன்
    அப்போதும் நீ வரவில்லை!!

    நீறு தரித்திட்டேன்
    நீளமாய் நெற்றியிலே - உனை
    நினைந்து ஆயினும் நீ வரவில்லை !!

    உலக பந்தின் ஒவ்வொரு மூலையிலும்
    உரைத்திட முடியா அநீதிகள்
    உபாயம் தேட நீ வரவே இல்லை!!

    இதற்கு பின்னும்
    நீ வர காரணம் ஒன்று
    உண்டோ என அறியேன்!!
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

  2. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    இயற்கை மாறுபாடுகளின் காரணமாக உயிர்கள் அழிவது,நிலப்பரப்பு மாறுபடுவது...இவை இரண்டும் மனிதனால் அறிந்து கொள்ள இயலாத நிகழ்வுகள்..

    போர்களுக்கும் வறுமைக்கும் காரணம் இறைவன் அல்ல ..மனிதனின் சுயநலமும் ஆசையும்....

    சம்பவாமி யுகே என்று காத்திருக்க வேண்டியதுதான்...

    அஹம் பிரம்மாஸ்மி என்று அமைதியுற வேண்டியதுதான்..வேறு வழி இல்லை

  3. #3
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    31
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0
    ஆக்கமும் அழிவும் இன்றி பூவுலகில் உயிர்ச்சமநிலை பேணப்பட முடியாது என்பதனையும், மனிதனின் அழிவுகளுக்கு பல வழிகளில் அவனே காரணகர்த்தா என்பதனையும் நன்கு அறிவேன்.

    எனினும் உலகில் மிகவும் ஜீரணிக்க இயலாத விபரீதங்களை கண்ணுற்றதும், என்னை அறியாமலே இறைவனின் வருகை வேண்டி மனமானது ஏங்குகிறது.

    நன்றி ஜான்
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    என்னுள் சிலநேரங்களில் தோன்றும் இக்கேள்விகள் தங்கள் கவிதைகளில் ..என்றும் அதிசயங்கள் நிகழ்வதில்லை நிகழ்ந்தால் நன்றாயிருக்கும் என்னும் நம் மனநிலை என்றும் மாறுவதில்லை.காரண காரியங்களின்றி நிகழ்வுகள் நிகழ்வதிலை .இறைவனின் செய்கை மிகவும் மாறுபாடானது, உணர்ந்தவர்கள் அறிவர்.உணராதோர் மனம் புழங்கி உழல்வர் .தொடரட்டும் சபீக்ஷ்னா..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. Likes Sabeekshana liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •