என் சிந்தனைகள்
வெற்றிடமாகின்
சிலசமயம்
நான் வானிடம்
தஞ்சம் கொள்வேன்!!
வான் என்றும்
வாரி வழங்கும்
தன் வண்ணக்கவிக்களை
குறை ஒன்றின்றி
குதூகலிப்புடன்!!
வான் உதிரும்
வார்த்தைகள்
தேனை வார்க்கும்
உடலில் வல்லமை
தனை சேர்க்கும்!!
மேகங்கள் என்
எண்ணங்களை மெருகூட்ட
மின்னல் ஆங்காங்கே- கற்பனை
மின்சாரமாய் பரிணமிக்க
பிறந்தது ஒரு கவி- பின்னூட்டலுடனே!!
Bookmarks