அடிமை உணர்வுடன்
ஆங்கிலவர் ஆட்சியில்
விழிகளில் நீர்படலம்
வீணாகிப் போக
புடைத்த நாளங்களும்
புதுவிதி காட்ட மறுக்க
மாற்றானுக்கு தினம் தினம்
மண்டியிட்ட நாட்கள்!!
ஜனநாயகம் என்பது- வெறும்
ஜடமாகிப் போக
துப்பாகிகள் பெருகி - எம்
வாழ்வினை துவம்சம் செய்ய
ஆங்கிலத்தின் பிடியினில்
தமிழின் ஆரோக்கியம் சீர் கெட
வறுமையே வாழ்வான
வெறுமையின் அனுபவங்கள்!!
சமவுடைமை ஆட்சி
வெறும் சருகாகிப் போக
அவர் சாட்டைகளுக்கு
எமை சமர்ப்பணம் செய்து
யுகங்கள் தோறும் -அவர்
யுக்திகளுக்கு அடி பணிந்து
யுத்தம் புரிதல் மறந்த
யூதர்கள் நாம்!!
மகாத்மா போன்ற
மகான்களின் உதவியுடன்
அந்நியரை நாம்
அடித்து விரட்டினோம்
பூட்ஸ் அணிந்த
புலம் பெயர் கால்களுக்கு
புத்தி புகட்டி
புனர் வாழ்வு அளித்திட்டோம்!!
சுதந்திர காற்றின்
சுகமே தனியன்றோ!!
பக்குவமாய் அடை காத்து
பருவம் வந்ததும்
விடிவினை கண்டது- எம்
வீர சுதந்திரம்
கவசம் பூட்டி அதனை
காலமெல்லாம் காத்திடுவோம்!!
உருண்டு கொண்டிருக்கும் - உலகின்
ஒரு மூலையில்
திரண்டு நாம்- பாரதத்தின்
திறம் பாடி பயன் ஒன்றில்லை
எம் திறமை கொண்டு
திசை அனைத்தும்
இச்சை தீர "இந்தியன்" என
இடியென முழங்கிடுவோம்!!
Bookmarks