உதிரம் சிந்தி
உத்தமர்கள் வாங்கிய
நள்ளிரவு சுதந்திரம்
விடியவில்லை எனக்கூறும்
சோம்பேறிகள்.!!
கருப்புப்பண முதலைகளுக்கும்
கள்ளச் சந்தைக்கும்
அடித்தளமிடும் அரசாங்கம்!!
கல்லூரி எனும் வகுப்பறையில்
கள்ளில் ஊறிய களஞ்சியங்கள்
பல்கலை கழகத்திலோ
பல்வகை பாதகங்கள் !!
பாவங்களைப் போக்கிடும்
பகவான் இருப்பிடம்,
தாபங்களை தீர்க்கும்
தர்மசாலையாகி விட்டது.
இறந்து விட்ட தலைவருக்காக
பிறந்தநாள் வாழ்த்துப்பாட,
இருக்கின்ற மக்களை
அழவைக்கும் அரசியல் கட்சிகள் !!!
Bookmarks