கண்மணியே ! உனக்காகக் காத்திருக்கிறேன் !
உனக்காகக் காத்திருப்பதும் சுகம்தான் !
என்னுள்ளே நீ இருக்கின்றாய் !
உன்னுள்ளே நான் இருக்கின்றேனா ?
உன்
ஒவ்வொரு அசைவையும் நானறிவேன் !
அந்த
அசைவில்தான் எத்தனை இன்பம் !
என்மொழி உனக்குக் கேளாதெனினும்
நீ பேசும் மௌனமொழி நன்கறிவேன்
உன்
முகம் காணத் துடிக்கின்றேன்
முத்தமழை பொழிய அழைக்கின்றேன் .
முந்தித் தவமிருந்து
முன்னூறு நாள் சுமந்து விட்டேன் .
விரைந்து நீ வா ! ஒரு சேயாக
தாலாட்டுவேன் ஒரு தாயாக !
Bookmarks