Results 1 to 3 of 3

Thread: மீண்டும் மழை வரும்....

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2008
    Location
    tamilnadu
    Age
    41
    Posts
    98
    Post Thanks / Like
    iCash Credits
    28,721
    Downloads
    9
    Uploads
    0

    மீண்டும் மழை வரும்....

    தனிமை சிலிர்த்தது
    அந்த குளுகுளு காற்றில்..

    அங்கே
    ஒற்றைப்பாதையில்
    ஈர மணலின்
    புதுமழை ஓவியங்கள்...

    அந்த
    நவீன ஓவியங்கள்
    மலராத வாசப்பூவின்
    மகரந்தமாய் காத்துக்கிடப்பதாய்...

    அவனின் சில எண்ணங்கள்.
    கற்பனைகளையும், ஞானத்தையும்,
    துணையாய் கொண்டு
    கிடைத்தறியா பிம்பங்களை
    தேடி, வருடி,
    நெருங்கித்திளைக்கிறது...
    அது
    காப்பியமா?..
    காதல் நயனமா?..
    ஈசனமர்வா?..
    ராசனவையா?...
    நெருங்கித்தொட்டு
    கண்ணை திறந்தான்..

    அரைநாண் கயிற்றை
    ஆடையாய் அணிந்த
    துறுதுறு பயல்கள்
    அதை துழவிவிட்டார்கள்...
    பரப்பிய கால்களுக்கிடையே
    கூட்டி விளையாட .....

    அவனுக்குள் ஏனோ
    எட்டவிருந்த ஞானத்தை
    தட்டிவிட்டதாய் தவிப்பு...
    ரசனையேனும் மிச்சமிருந்ததால்
    விளையாட்டை நோட்டமிட்டான்..

    வேப்பந்தளிரை
    குவித்த மணலில் நட்டுக்கொண்டே
    சிறுவன் சொன்னான்,
    இது எல்லாம் என் மரங்கள்,
    அதிகம் நட்டால்தான்
    அழகு கிடைக்கும்....

    அந்த
    நவீன ஓவியம்
    " பிள்ளை விளையாட்டாய்"
    பரிணமித்ததால்,
    அவனுக்கு
    மீண்டும் ஒரு நாள் மழை வரலாம்...
    புது ஓவியத்திற்காக... ..
    - குளிர்தழல் ..
    "உன்னை விட திறமைசாலி யாரும் இல்லை"எனும்போது உன்னை விட புத்திசாலிகள் நிச்சயம் உண்டு.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    மீண்டும் ரசிக்க தூண்டும் இயற்க்கையின் விளையாட்டு ..வாழ்த்துகள் குளிர்தழல் கவிதை அருமை தொடரட்டும் ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #3
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    32
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0
    இயற்கையின் எழில் இழையோட கவிதை அழகாக இருக்கிறது!!

    மரங்களை நடுவதால் பச்சை வீட்டு விளைவு மூலம் மழை பெய்கிறது என்பதையும் சுட்டுகிறது தமது கவி!!

    வாழ்த்துக்கள்!!
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •