உவமை தனை கலந்து
உருவகம் தனை களைந்து
உருத்திரிபுற நீ பிறக்க
உருக்கமாய் பரமனை வேண்டினேன்!!
இப்பிரசவமே ஒரு பரவசமாய்
பிறழ்வுகள் ஏதும் அற்ற
பிணிகளுக்கு நிர்ப்பீடனமான
பிஞ்சாக உனை ஈன்பேன்!!
என் உணர்வுகள் உருவம் பெற
உத்தமனாய் நீ உதிப்பாய்!!
என் கற்பனைகள் கலை வடிவம் பெற
காவியமாய் நீ பிறப்பாய்!!
பத்தியங்கள் ஏதுமில்லை
பத்து மாதம் காக்கவில்லை- ஆனால்
தத்துவங்கள் பலவற்றை நீ
தத்ரூபமாய் படம் பிடித்தாய்!!
எந்தன் சிதைவினிலே
சிலையாக உனை வடித்தேன்!!
கண்ணாளன் துணை இன்றி
கர்ப்பமானேன் நான் உனக்காக!!
Bookmarks