Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: ஆண் பெண் நட்பு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    ஆண் பெண் நட்பு

    பெண்ணுடன் பெண்ணும் ஆணுடன் ஆணும்
    ...பேசிக் கொள்வதை ஏற்கும் உலகம்
    பெண்ணும் ஆணும் பேசிக் கொண்டால்
    ..." பிறந்தது காதல் " என்பது சரியா ?
    மண்ணுல காண்ட வள்ளல் அதியனும்
    ...மாண்புறு கிழவி ஒளவைப் பாட்டியும்
    கொண்ட நட்பு ஆண் பெண் பேதம்
    ...கடந்த நட்பின் சாட்சி அன்றோ ?

    துரியனும் கர்ணனும் கொண்ட நட்பு
    ...தூய நட்பின் இலக்கணம் ஆகும்
    ஒருநாள் கர்ணனும் துரியனின் மனைவியும்
    ...பெருகிய நட்பில் தாயம் ஆடிட
    அருகினில் கணவனின் வருகையைக் கண்டு
    ...அம்மட மாது சற்றே எழுந்திட
    " இரு இரு " என்றே அவள் கைபற்றி
    ...இழுத்த கர்ணனின் செயலைக் கண்டு



    சிரித்தனன் துரியன் தரையில் ஆங்கே
    ...சிதறிக் கிடந்த முத்தைக் குனிந்து
    பொறுக்கி எடுத்தவன் கர்ணனை நோக்கி
    ...எடுக்கவோ அன்றிக் கோக்கவோ என்ற
    அரிய மாண்பினைக் கவியில் வடித்திட
    ...ஆயிரம் பக்கம் போதா தன்றோ !
    தெரியச் செய்வோம் உண்மை நட்பு
    ...ஆண்பெண் பேதம் கடந்தது என்றே !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    எதில் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதைப் பொருத்து எல்லாம் அமையும். ஆண் பெண் வித்தியாசத்தில் கவனம் செலுத்தினால் அதுவாகத்தான் முடியும். நட்பில் கவனம் செலுத்தினால் நட்பாய் முடியும்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஓர் ஆணும் , பெண்ணும் நட்புடன் பழகினாலும் , உலகத்தின் பார்வை வேறு விதமாகத்தானே இருக்கிறது . துறவிகளாலும் வெல்ல முடியாத காமத்தை , சில மனிதர்கள் வென்று இருக்கிறார்கள் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும் .


    தாமரை அவர்களின் பின்னுரைக்கு நன்றி .
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. Likes அனுராகவன் liked this post
  5. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    காமத்தை வெல்ல முன்றவனுக்கும்
    காமத்தைச் சொல்ல முயன்றவளுக்குமான போட்டியில்
    காமத்திற்கு இரட்டை பலம்.!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. Likes அனுராகவன் liked this post
  7. #5
    இளையவர் Sabeekshana's Avatar
    Join Date
    25 Jul 2014
    Location
    Mumbai
    Age
    32
    Posts
    74
    Post Thanks / Like
    iCash Credits
    2,462
    Downloads
    0
    Uploads
    0
    ஆணும் பெண்ணும் மனதில் எத்துணை தூய்மையுடன் பழகினும் இம்மண்ணின் கண்ணோட்டம் "காதல்" குறித்ததாகவே அமையும்.

    நாம் இதற்காக முழுமையாக சமுதாயத்தை பிழை கூறுவதும் தவறு.

    "நட்பு" என்ற சொல்லை பிரயோகித்து பெண்களை கூறு போடும் நய வஞ்சகருக்கு குறைவில்லை இவ்வையகத்தில்.

    நன்றி ஐயா தங்களது கவிக்கு!!
    ......................................................................................................................
    "சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்

    அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"

    .......................................................................................................................

    வாழ்க வளமுடன்
    இப்படிக்கு
    சே. சபீக்ஷனா

  8. Likes அனுராகவன் liked this post
  9. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தாமரை மற்றும் சபீக்ஷனா ஆகியோரின் பின்னுரைக்கு நன்றி .
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    ஆணும் பெண்ணும் பார்க்கும் பார்வையில் நடந்து கொள்ளும் விதத்தில் துவங்குகிறது இந்த மாறுபாடு....தொடரட்டும் ஐயா..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  11. Likes அனுராகவன் liked this post
  12. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அழகிய கருத்து மிக்க கவி ....பாராட்டுக்கள் ஐயா...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  13. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஐயா, காலம் மாறிக்கொண்டே வருகிறது. இப்போது பெண்ணும் பெண்ணும் கைப்பிடித்து சிநேகமாய்ப் பேசினாலும் ஆணும் ஆணும் தோளில் கைபோட்டு தோழமையோடு நடந்தாலும் அதையும் மாற்றுக்கண்ணோட்டத்தோடு பார்க்கும் நிலை வந்துவிட்டது. நட்பின் இலக்கணம் நடைமுறையில் மாறிக்கொண்டே போவது வருத்தம் தரும் விஷயம்.

    ஆனால் தங்கள் கவிதை வரிகள் தமிழின் இனிமையோடு கருத்தினிமையும் கலந்து காதில் இனிக்கிறது. பாராட்டுகள்.

  14. Likes arun karthik liked this post
  15. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஜெயி , அச்சலா , கீதம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  16. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    அழகு கவிதை ஐயா...

  17. #12
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    நட்பென்பது பால் எல்லைகளுக்கு உட்பட்டதும் உட்படாததுமாயிருக்கிறது.
    தாம்பத்தியத்தில்கூட இழையோடும் நட்பிருந்தால் அதன் சுவை கூடுகிறது.

    ஜயா தங்கள் கவிதையில் தமிழ் பற்றினுடே இழையோடிய நட்பை சுவைபடக்கூறியுள்ளீர்கள்!

    தாமரை ஜயாவின் ஆன்மீக விவாத அலசலுக்கும் ஒரு விதை உங்கள் கவிதையிலிருக்கிறது!
    " தெய்வீக சம்பந்தத்தால் (அம்சங்களுடன்) பிறந்த இருவர்களின் நட்பை (தெய்வமாகப்பிறந்தவன் - கிருட்டினன், இந்திரனின் தெய்வாம்சத்தில் பிறந்தவன் அர்சுனன்) காட்டிலும் துரியன் (படைக்கப்பட்டவன்) கர்ணனிடம் (சூரியனின் தெய்வாம்சத்தில் பிறந்தவன்) காட்டிய நட்பு மேம்பட்தா இல்லையா?"
    என்றென்றும் நட்புடன்!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •