சமுத்திரத்தில் விழுந்த மழைத்துளி- நீரில்
சலனமின்றி சங்கமித்தது
பெண் மனதில் காதல்!!
பூரண நிலவில் ஆங்கே புள்ளிகள் தோன்றி
புதுக்கோலம் பிறந்திற்று
பெண் மனதில் காதல்!!
கண்ணாளன் விழி காண மொழி மறந்து
வழி தேடும் வலிகள்
பெண் மனதில் காதல்!!
மெட்டில்லாப்பாடல் மெல்லிசையாய்- ஒரு
துட்டில்லா மனிதன் துரையாக!!
பெண் மனதில் காதல்!!
வரண்ட காற்றும் வாழ்வில்
பெரு வசந்தம் தந்திற்று
பெண் மனதில் காதல்!!
மொட்டவிழ்ந்த மலரொன்று
வண்டின் மொழிக்காக ஏங்கிற்று
பெண் மனதில் காதல்!!
அவனுக்காய் ஒப்பந்தமான ஒன்றாய்
நிதம் மனதுள் நிர்ப்பந்தம்
பெண் மனதில் காதல்!!
ஆழ் கடலின் ஆர்ப்பரிப்பு
ஒரு ஆழிப்பேரலையாக- இதயத்தில்
பெண் மனதில் காதல்!!
தேகமெங்கும் மின்னல் வெட்டு
அவன் மின்சார கண்களினால்
பெண் மனதில் காதல்!!
"பொல பொல" என கண்ணீர்
பொங்கி வீழ்தலும் ஒரு சுகமாய்
பெண் மனதில் காதல்!!
Bookmarks