இப்புதிய கன்னிகையின் வரவை ஏற்றருளுங்கள்.
இப்புதிய கன்னிகையின் வரவை ஏற்றருளுங்கள்.
நல்வரவு சபீக்ஷனா. பதிந்தவுடனேயே உங்கள் படைப்புகளை வாசித்து எவரும் விமர்சிக்கவோ பாராட்டவோ இல்லையென்ற வருத்தம் வேண்டாம். மன்ற உறவுகள் பலருக்கும் தற்சமயம் வெவ்வேறு பணிச்சுமையினால் மன்றவருகையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் அந்நிலை நீங்கும் என்று நம்புவோம். சில கவிதைகள் காலங்கடந்தும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளன என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே வருத்தம் வேண்டாம். தொடர்ந்து பதிவிடுங்கள்.
நல்வரவு சபீக்ஷனா ..முதலில் எனது வாழ்த்துகள் காரணம் மன்றம் வந்து சிலவருடங்கள் ஆனா பின்னரும் பதிவிடாது தென்றாலாய் ஒரு பார்வை பார்த்து செல்பவர்கள் மத்தியில் தங்கள் படைப்புகளை துணிந்து பதிவிட்டமைக்கு..இந்த மன்றம் என்றும் தம்மை மேம்படுத்தி கொள்ள உதவும் எனும் ஐயமேதும் இல்லை .படைப்புகளுக்கான பின்னூட்டம் கொஞ்சம் பிந்தலாம் ஆனால் சிறந்த படைப்பிற்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் தங்கள் எண்ண படைப்புகளை தடங்கலின்றி தொடருங்கள் .தங்கள் படைப்புகள் செதுக்கிய சிலையை போல் கலையம்சத்துடன் மிளிரட்டும் .
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
கீதம் அவர்களே, தங்களது வார்த்தைகள் என்னுள் புதிய உணர்வை ஊட்டுகின்றன.
நான் தமிழ் மீது அளவற்ற அன்பு கொண்டவள். ஆதலால் இந்த மன்றினை எனது பதிவுகளுக்காய் தேர்ந்தெடுத்தேன்.
மிக்க நன்றி தோழமையே
ஜெய் அவர்களே,
புதிய உறுப்பினர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நீங்கள் ஆற்றும் பணி அளப்பரியது.
மிக்க நன்றி
இங்குள்ள படைப்புகளை வாசிப்பதன் மூலம் என்னை மேலும் மெருகூட்டி கொள்ள முடியும் என்பதை உணர்கிறேன்.
வாராய் என்தோழி ! வாராயோ !
...தமிழ்மன்றம் காண வாராயோ !
தீராத தமிழ்க்காதல் கொண்டோர்க்குத்
...திகட்டாத நல்விருந்து தமிழ்மன்றம்
கூரான விழிகொண்டு பார்த்திடுவாய் !
...குறையேதும் இருந்தாலோ செப்பிடுவாய் !
நேரான தமிழ்த்தொண்டு செய்திடுவாய்!
...நேயர்கள் ஏற்றிடுவார் தலைவணங்கி !
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
மிக்க நன்றி ஜெகதீசன் ஐயா அவர்களே!!
வாங்க வாங்க சபீக்ஷனா
நன்றி அமரன்!!
......................................................................................................................
"சிரிக்கும் போது வாழ்கையை ரசிக்க முடியும்
அழுகின்ற போது தான் அதனை புரிந்து கொள்ள முடியும்"
.......................................................................................................................
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
சே. சபீக்ஷனா
அன்புடன் வரவேற்க்கிறேன் நண்பரே!!சபீக்ஷனா
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks