Results 1 to 10 of 10

Thread: அசோகவனத்து ராமனாட்டம்!

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    அசோகவனத்து ராமனாட்டம்!



    ஆதிகாலக் கனவுகளின் வண்ணங்களைக்
    குழைத்தென் அன்பின் வார்ப்பில்
    பிரத்தியேகமாய் வார்க்கப்பட்டவன் நீ!

    மேனி போர்த்த வண்ணங்களில்
    பிரதிபலித்துக்கிடக்குமென் பிரேமைக்கும்
    பேராரவாரப் பெரும்புயலென
    உன்னுள் புகும் தருணமெதிர்பார்த்து
    என்னிதழ்க்கடையில் குந்திக்கிடக்கும்
    அமுதவீச்சுக்குமாய்
    அந்தரங்கத் தனிமையில் காத்திருக்கிறாய்
    அசோகவனத்து ராமனாட்டம்!

    உன் உயிர்ப்பின் மந்திரத்தை ஒளித்துவைத்த
    கவிதையின் முகவரியைத் தொலைத்தலையும்
    இப்பிச்சிக்காய் இன்னும் சில காலம் காத்திரு…
    வந்துவிடுவேன் என்றேனும் ஒருநாள்…
    ஏதேனும் ஒரு சென்மத்தில்!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    உண்மை காதலில் காத்திருத்தலும் சுகம்தான் ..கவிதை நன்று ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. Likes கீதம் liked this post
  4. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    காதலித்தால் சென்ம காலங்கள் கூட சில மணித்துளிகள் தானோ!!காத்திருப்பிற்கு?

  5. Likes கீதம் liked this post
  6. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    உண்மை காதலில் காத்திருத்தலும் சுகம்தான் ..கவிதை நன்று ..
    நன்றி ஜெய்.

    Quote Originally Posted by dellas View Post
    காதலித்தால் சென்ம காலங்கள் கூட சில மணித்துளிகள் தானோ!!காத்திருப்பிற்கு?
    நன்றி டெல்லாஸ்.

  7. #5
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    உன் உயிர்ப்பின் மந்திரத்தை ஒளித்துவைத்த
    கவிதையின் முகவரியைத் தொலைத்தலையும்
    இப்பிச்சிக்காய் இன்னும் சில காலம் காத்திரு…
    வந்துவிடுவேன் என்றேனும் ஒருநாள்…
    ஏதேனும் ஒரு சென்மத்தில்!
    உண்மைதான்!
    சென்மசென்மமாய் காத்திருந்தாலும்!
    முகவரிகள் மட்டும் தொலைந்ததாகவே இருக்கின்றன!
    சில அப்பாவி ஆண்களுக்கு!..


    மிகவும் அழுத்தமான வார்த்தைகள்!.... பாராட்டுகள் கீதம் அவர்களே!
    என்றென்றும் நட்புடன்!

  8. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அழகான கவி கீதம் ...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  9. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    தலைப்பே அழகிய காட்சிக்கவிதை. அதை விஞ்சும் ஓவியம். அதையும் மிஞ்சும் கருத்துப்பா.

    இளவரசி முத்தமிட்டால் தவளையும் இளவரசனாகும்போது, மயிற்தோகை ஒத்த வண்ணம் கொண்ட காதலுக்கும் அமிழ்தை ஒத்த இதழ்நீருக்கும் எத்தனை வலிமை இருக்கும்!!!!?????

    ஆதிமந்தி அரற்ற ஆட்டனத்தி மீண்டு வந்ததுபோல்.. இந்த நாயகி ஏங்கலுக்கு நாயகன் நிச்சயம் உயிர் பெறுவான்.-- முகவரி கிடைக்குமுன்பே,,, இப்பிறவி தீருமுன்பே,,,

    கீதத்துக்கு பாராட்டுக்கள்

  10. #8
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0
    கீதத்தின் நாதம் கண்டேன் இக்காலை வேளையில்
    பேதமின்றி ஈருடல் ஓருயிராய் காதலிப்போர்
    வேதமிது என்று நினைக்குமளவு அருமை வரிகள்
    வேதனை தீர்க்க தூதன் அனுமனும் வரட்டும் விரைவினிலே

  11. Likes govindh, ravisekar liked this post
  12. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    மனோ60 - பா அருமை.

  13. Likes govindh liked this post
  14. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    அசோகவனத்து ராமனாட்டம்!
    ஆம்...சோகக் கவி...!
    இல்லை...இது சுகக் கவி...!
    காத்திருப்பு -
    சுகம் கலந்த சோகம்...!

    கவி அருமை...!
    பாராட்டுக்கள் .. கீதம் அவர்களே..!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •