அளவுக்கதிகமானால்
உன் மூளையை உன்னையறியாமலேயே ஊடுருவி
உன் எண்ணங்களை உன்னையறியாமலேயே உருமாற்றி
உன் அடையாளைத்தை நீயறியாமலேயே வேறாக்கி
தன்னுடையதாய்...தனதடிமையாய் ஆக்கிக்கொள்ளும் மது
எப்போது வேண்டுமெனிலும் தாக்கிக் கொல்லும் அது...!!!
நீ அறிந்து அருந்தும் விஷம்
நீ அறிய மறுக்கும் நிசம்
மகளென, மற்றவரென
தாயென, தாரமென
தரம்பிரித்தறியா வண்ணம்...உன்னை
தரமிழக்கச் செய்யும்......
நட்பென்ற...உறவென்ற இரு
கரமிழக்கச் செய்யும்.....மனிதனென்ற
வரமிழக்கச் செய்யும் இந்த.மதுபோதை...
மறந்துவிடு துறந்துவிடு....அதனை
இனி தேர்ந்தெடு தொடர்ந்திடு உன் பாதை...!!!
Bookmarks