கால் சலங்கையில்
கவி எழுதும்
கன்னியே..
உன் எண்ணம்
என்னவோ!!
எண்ணமாக நானிருந்தால்
திண்ணமான
என் னுதட்டில்
சன்னமாக
முத்தமிட்டு செல்லாயோ..!
கால் சலங்கையில்
கவி எழுதும்
கன்னியே..
உன் எண்ணம்
என்னவோ!!
எண்ணமாக நானிருந்தால்
திண்ணமான
என் னுதட்டில்
சன்னமாக
முத்தமிட்டு செல்லாயோ..!
காலிலே கவியெழுதும் கன்னிநான்! என்னுடைய
...காதலுக்கு ஏங்காத காளையர் ஈங்கில்லை!
வேலியிலாப் பயிரென்று என்னை நினைக்காதே!
...வெட்டுக்கும் குத்துக்கும் அஞ்சாத கன்னிநான்!
போலிகளும் புரட்டுகளும் உலவுகின்ற இவ்வுலகில்
...பெண்ணுக்கு வேண்டுமடா காவல் முழுநேரம்!
தாலிதனை என்னுடைய கழுத்திலே கட்டிவிட்டால்
...தந்திடுவேன் தித்திக்க முத்தமதை அதரத்தில்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
அருமை
கவிதை அழகு....வாழ்த்துகள் பாவூர் பாண்டி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பாவூர் பாண்டியின் கெஞ்சற்கவிதையும் அதற்கு பதில் தரும் ஜகதீசன் ஐயாவின் வஞ்சிக்கவிதையும் மனம் தொட்ட அழகு. இருவருக்கும் பாராட்டுகள்.
பாவூர் பாண்டி, ஜெகதீசன் இருவருமே அச்த்திவிட்டனர். பாராட்டுக்கள்
அருமை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks