நட்பு பூக்கொண்டு நன்வாழ்த்து
மொழிய வந்தோம்
யாழின் இசையெல்லாம்
இசைந்து வரும் இன்னாளில்...
வானின் மேகங்களை குளிர்த்து
மழையாக்கும் பொதிகைமலைத் தென்றலது
மகிழ்வு கொடுக்கும் வாழ்கைக்கு
விண்மீன்கள் எல்லாம்
விழித்திருக்கும்
வாழ்வின் கனவுகளை
வெளிச்சமாக்கும் காரணமறிந்து...
வாழ்வின் யதார்த்தம் உணர்ந்து
இன்பங்கள் செழித்து
மேகத்துளிகளும் இளவெயிலும்
ஒருசேர நிகழ்த்தும்
வானவில் வருணம் போல்
வாழ்வை
வருணங்கள் கொண்டு
அள்ளியணைத்துக் கொள்ளுங்கள்..
---------------------------------------------------------------------
Bookmarks