மரங்களே!
துண்டாடிக் கொண்டாடுவோருக்கு
உயிர் கொடுப்பதை நிறுத்துங்கள்....
காற்றே!
இந்த பாவிகளின் பாவப்புகையை
கரைத்து விடாதே..
நிலங்களே!
அகழ்வாரைப் பொறுக்கும் நீங்கள, இந்த
இகழ்வாரைப் பொறுக்காதீர்கள்....
மேகங்களே!
கடலுயிர்களை அழிக்கும் கடல்கொலையர்களிடம்,
கருணை மழையைப் பொழியாதீர்கள்...
இன்று ஒரு நாள் மட்டும்....
இந்த பிணக்கொத்துகள் எத்தகைய
வருங்காலத்தை சமைக்கிறார்கள்
என்று பார்க்கலாம்.....
Bookmarks