தேர்தலில் தோற்றால்
மாணவனுக்கு
ஒரு வருடம்தான் வீண்.
வேட்பாளருக்கோ
ஐந்து வருடம் வீண்.
தேர்தலில் தோற்றால்
மாணவனுக்கு
ஒரு வருடம்தான் வீண்.
வேட்பாளருக்கோ
ஐந்து வருடம் வீண்.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
தேர்தலில் மாணவன் ஈடுபட்டால் வேட்பாளர் தோற்றாலும் வெண்றாலும் மாணவனுக்கு அவ்வருடம் வீண்தானே
என்றென்றும் நட்புடன்!
தோற்றாலும் வென்றாலும் மாணவனால் மற்றவர்க்கு
......துன்பங்கள் ஏதுமில்லை; துயரங்கள் வருவதில்லை!
காற்றோடு செல்லுகின்ற காகிதக் குப்பைபோல்
......கட்சிவிட்டு கட்சிமாறும் அரசியல் வாதியெல்லாம்
கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே
......கும்பிட்டு விழுந்திடுவார்; உயிரினைக் காத்திடுவார்!
வெற்றியினைத் தந்திட்ட மக்கட்கு அவராலே
......வேதனை ஐந்தாண்டு! வேறென்ன கூறிடுவீர்!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
"கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே
......கும்பிட்டு விழுந்திடுவார்..."
அழுத்தமான கருத்துப்பதிவு.
பின்னூட்டத்திற்கு நன்றி, ஜகதீசன் அவர்களே.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள்!
எவன் வென்றாலும், கடந்த 60 வருடங்களாய் தோற்பது வேட்பாளர்களை கழித்தது போக மீதி உள்ள நம் மக்கள் மட்டுமே!
உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
-லெனின்-
என் முக நூல் பதிவுகள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks