கற்பு கற்பு என்று
பலர் கதைக்கின்றனர்
எவரேனும் கண்டதுண்டா
கடவுளையும் தான் யாரும்
கண்டதில்லை - ஆயினும்
சிலை உண்டன்றோ
உடலால் காயமடைந்தவளை
தேனுடன் தேனீயும் சொட்டும்
விசச் சொற்களால்
விடாது கொட்டும் வீரர்களே
உங்களிடம் ஓர் வினா
மணமாகா பெண்
உறவு கொண்டாள்
போய்விடும் கற்பு
மணமான பின்
உறவு கொண்டாள்
போகாதோ?
Bookmarks