களவு செய்யும் கயவர் கண்டு பயமா
கலவில் கனியும் காதலர் கண்டு நாணமா
கவிதையில் உன்னை புகழ்வது கண்டு வெட்கமா
கடமை மறந்த கயமையர் கண்டு ஆற்றாமையா
என்ன காரணம் நிலவே நீயுன் முகத்தை
மற்றி மாற்றி காட்டி மறைகின்றாய் ?
களவு செய்யும் கயவர் கண்டு பயமா
கலவில் கனியும் காதலர் கண்டு நாணமா
கவிதையில் உன்னை புகழ்வது கண்டு வெட்கமா
கடமை மறந்த கயமையர் கண்டு ஆற்றாமையா
என்ன காரணம் நிலவே நீயுன் முகத்தை
மற்றி மாற்றி காட்டி மறைகின்றாய் ?
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
கவிதை நன்று. மு.நா. அவர்களுக்கு என் பாராட்டு.
நிலவு பேசினால்....
=============================
ஆகாயம் என்வீடு பூமியில் நடக்கின்ற
......அக்கிரமம் அத்தனையும் பார்க்கின்றேன் மனிதர்கள்
வேகாது மதுவினால் வெந்து சாகின்றார்
......வேறொருவன் சொத்துக்கு வஞ்சனைகள் செய்கின்றார்
போகாத நெறிசென்று கற்பழிப்பு கொலைகளவு
......போஜனம் உண்பதுபோல் நித்தமும் செய்கின்றார்
ஆகவே அவையல்லாம் காணப் பிடிக்காது
......அமாவாசை நாள்மட்டும் கண்மூடி நிற்கின்றேன்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
கவிதையும் பின்னூட்டமும் ரசிக்க வைக்கின்றன
இத்தனைக்கும் பதில் என
புன்னகைத்துக் கிடக்கிறது நிலவு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks