பகைவென்று வெள்ளைப் பரங்கியனைச் சீமைக்கு
......அனுப்பியும் வரவில்லை நமக்குச் சுதந்திரம்
நகையணிந்த பெண்ணொருத்தி நடுநிசியில் காப்பாக
......நடந்தே செல்லுகின்ற நிலையிங்கு வந்திடுமா?
புகைப்பனியால் சூழ்ந்ததிரு பெங்களூரு மாநகரில்
......பெண்ணொருத்தி ஏடிஎம் சென்டரில் திருடனிடம்
வகையாக மாட்டியே தாக்குண்ட சம்பவம்
......வந்ததா சுதந்திரம் எனக்கேட்கத் தூண்டிடுமே!
Bookmarks