ஆனந்தன் வென்று ஆறாம் முறையும்
......அகிலத்தில் சாம்பியன் ஆவார் என்றெண்ண
ஏனிந்தத் தோல்வி? எப்படி நடந்தது?
......எனநினைக்கும் வேளையிலோர் உண்மை புரிந்தது
ஆனைக்கும் ஓர்நாள் அடிசறுக்கும் இவ்வுலகில்
......அறுபதை இருபது வெல்லும் அதிசயமும்
வானத்தின் அளவு புகழ் கொண்டார்க்கும்
......வந்திடும் என்பதே அவ்வுண்மை ஆகும்.
Bookmarks