என்னைப் பார்க்கும்
எல்லோரும் கேட்கின்றனர்
எப்போது திருமணம் ?
எப்படிப் புரிய வைப்பேன்
பணம் பார்க்கத் தெரிந்தவர்கள்
மனம் பார்க்கத் தெரிந்தவர்களாய்
ஆகும்போது திருமணம் என்று.
என்னைப் பார்க்கும்
எல்லோரும் கேட்கின்றனர்
எப்போது திருமணம் ?
எப்படிப் புரிய வைப்பேன்
பணம் பார்க்கத் தெரிந்தவர்கள்
மனம் பார்க்கத் தெரிந்தவர்களாய்
ஆகும்போது திருமணம் என்று.
எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி
திருமணம் என்பதை திரு"பணம்" என்று நினைத்து கொண்டார்களோ என்னவோ..???
அப்படியே...சார்... மனம் பார்த்துதான் திருமணம் என்றால் எல்லோரும் நித்திய பிரம்மசாரிதான்...
அதை நம்மாலையே புருஞ்சுக்க முடியல,
அடுத்தவங்க எப்படி புருஞ்சுக்குவங்க...
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
பல வீடுகளில் தங்கள் மகன் மகள்களின் மனத்தைப் பெற்றோரே புரிந்துகொள்ளாத நிலையில் அடுத்தவரைச் சாடி ஆவதென்ன?
பல உள்ளங்களின் ஏக்கம் கவிதையாய் இங்கே... பாராட்டுகள் மும்பைநாதன்.
இந்த கேள்வியை எல்லாரும் என்னிடமும் கேட்கிறார்கள். அதனால்தான் பச்சக்கென்று கவிதை ஒட்டிக் கொண்டது. ஒரு ஒரு சின்ன மாற்றம் என்னவெனில் இப்பொழுது பெண்களை நிறைய படிக்க வைக்கிறார்கள். அதனால் படித்த மாப்பிள்ளையைத்தான் தேடுகிறார்கள். நான் ஆரம்பக் கல்வியோடு நின்றுகொண்டேன். எனக்கு பொண்ணே இல்லை என்ற நிலைமையே வந்துவிட்டது. இதெல்லாம் சாதி எனும் குறுகிய வட்டத்துக்குள் இருப்பதனால்தான்.
இருவரும் கோப்பைதீர
வார்த்தைகளைக் குடித்தோம்
புல்லைத் தின்று வாந்தியெடுக்கும் நாய் போல
கொட்டிக் கொண்டேயிருந்தாள்
அள்ளிக் கொண்டேயிருந்தேன் நான்
இருவரும் எழும்பொழுது
அவளுக்கு வார்த்தைகள் தீர்ந்து போயிருந்தது
எனக்கு ஒரு கவிதை கிடைத்தது.
சும்மா எழுதிப்பார்த்தேன்.. ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது கவிதை (மாதிரி) எழுதி.
@பென்ஸ் -
///மனம் பார்த்துதான் திருமணம் என்றால் எல்லோரும் நித்திய பிரம்மசாரிதான்.//
உண்மைதாங்க, பெரும்பாலான திருமணம் மனமொத்து நடப்பதில்லை. மணத்திற்குப் பின் மனம் என்பதுதான் இப்போதைய நிலைமை.
@கீதம்..
//பல வீடுகளில் தங்கள் மகன் மகள்களின் மனத்தைப் பெற்றோரே புரிந்துகொள்ளாத நிலையில் அடுத்தவரைச் சாடி ஆவதென்ன? //
இதுவும் உண்மையே.. பெரும்பாலான மகன்/மகள் தங்களைப் பற்றி பெற்றோரிடம் பகிர்வதில்லை. அப்படியே வைஸ்வெர்ஸா.
திருமணம் என்பது பெற்றோருக்கு கடமையாக இருக்கிறது
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks