ஒருமுறை ரஷ்யநாட்டு அதிபர் ஸ்டாலினைப் பார்க்க டாக்டர் இராதாகிருஷ்ணன் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தபோது போயிருந்தார்.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது இராதாகிருஷ்ணன் ஸ்டாலின் முதுகை மெல்லத் தடவிக் கொடுத்தார்.
ஸ்டாலின் நெகிழ்ந்து போனார்.
""ஐயா இதுவரை எத்தனையோ தலைவர்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் இவ்வளவு அன்பாக என்னோடு பழகியதில்லை. என்னை ஒரு சர்வாதிகாரியாகத்தான் பார்த்தார்களே ஒழிய, என்னை ஒரு மனிதனாகப் பார்க்கவேயில்லை. நீங்கள் என்னைத் தொட்டதும் ஒரு புத்துணர்ச்சி என்னுள் தோன்றியது'' என்றார்.
மனதிலிருக்கும் அன்பும் பரிவும் வார்த்தைகளால் மட்டுமின்றி கைகள் வழியாகவும் பயணிக்கின்றன என்பது இதன் மூலம் புலனாகிறது.
nandrigal :
டாக்டர் சி.சொக்கலிங்கம் எழுதிய "வல்லமை தாராயோ' என்ற மலேசிய நாவலிலிருந்து.
Bookmarks