ஞாயிற்றின் ஒளியெல்லாம் உன்வதன ஜோதியிலே
போயிற்று போயிற்று மங்கியே போயிற்று!
உன்அழகில் தோற்றோடியத் திங்களைத் தேற்றியே
கங்கைக்கு அருகினிலே வைத்திட்டான் சிவபெருமான்
செவ்வாயின் அழகினிலே சொக்கினேன் உந்தனுக்கு
செவ்வாய் தோஷம் இருந்தாலும் உன் கழுத்தில்
புதனன்று தாலியைக் கட்டிய வேளையில்உன்
வதனம் சிவந்ததம்மா! வந்திருந்த உறவினரும்
" தயாபரியே! தருமத்தின் தேவதையே !விண்ணிலுள்ள
வியாழன்போல் உன்மனது விசாலம் ! " என்றுரைத்தார்.
வெள்ளி முளைப்பதற்கு முன்பாக நீகுளித்து
அள்ளி முடிந்த கூந்தலிலே வேடுகட்டி
சனிஎன்னும் கடவுளை நீதொழும் வேளையிலே
பிணியகன்று வீட்டினிலே மங்கலம் வந்ததம்மா!
Bookmarks