வெண்பாவில் விடுகதைகள்
குறட்பாவில் விடுகதைகள் தொடரை அடுத்துப் பெரிய விடுகதைகளை வெண்பாவில் சேகரிப்போம்.
விடை ஈற்றடி வரும் ஒரு மறைசொல்லில். மற்ற விதிகள் முன்போல.
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.
இலையுண்டு இல்லை கிளைகளே காற்றில்
அலையும் மலருண்டு வாசமில்லை காயில்
இலைவிதையே கன்றுண்டு இல்லை பசுவே
பலபட்டை யுண்டெனினும் கட்டையென் றில்லை
விலையில்லா ஏழையிது வே!
--ரமணி, 01/10/2013
விடைகள் அடுத்த அஞ்சலில்.
Bookmarks