பூசணி
நண்டு...
மிச்சம் அக்கா சொன்னது சரி
பூசணி
நண்டு...
மிச்சம் அக்கா சொன்னது சரி
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
வணக்கம் கீதம் அவர்களே.
தவளை, கொடி, உப்ப சரி.
’காதணி’யில் மறைந்த இரு எழுத்துகளில் ஒன்றை விடுவித்தால்
’காசணி’ யாகும்.
’மாட்டு வண்டி’ என்பது நல்ல கற்பனை. ஆனால் விடை ’வண்டு’
போலுள்ள இன்னொரு ஜந்து. (அதைப் பற்றி இங்கு ஒரு சமையல் குறிப்பு பார்த்த மாதிரி ஞபகம்!)
தாமரை செல்வன் சரியான விடைகளைக் கூறிவிட்டார். இனி அடுத்த இன்ஸ்டால்மென்ட்...
தொட்டுநாம் காணவே றோர்விழி நேர்காணும்
எட்டிநாம் காணா மெழுகு. ... 21
மரத்தின் உயரே மலைப்பாம் பெனவே
உரத்துடன் தொங்கும் கழுகு. ... 22
(இரு சொல் விடை)
உரசினால் பாம்புபோல் மூர்க்கமாய்ச் சீறும்
சிரசினை நோக்கச் சிலை. ... 23
(இரு சொல் விடை)
அம்மா படுத்திருப் பாள்மகளோ டித்திரிவாள்
அம்மா கிழவியா பார். ... 24
(இரு சொல் விடை)
விழமாட்டீர் கீழ்சாய்ந்தால் அஞ்சாநீர் கொம்போ
எழுந்தாலோ நிற்பதறி யீர். ... 25
*****
Last edited by ரமணி; 03-10-2013 at 02:38 PM.
21... தொட்டுப் பார்க்கலாம். வேறோருத்தரும் பார்க்கலாம். நம்மால எட்டிக் கூடப் பாக்க முடியாதா? ஹையா ஜாலி... முதுகு...
22. புடலங்காய் இல்ல... அது கொடியில் காய்க்கும், முருங்கை இல்ல.. அது கழுகுக்கு ஒத்து வரலை.. உ சௌண்ட்ல மரத்துல தொங்கற மூணெழுத்து என்னாங்கப்பா? ,,, விழுது???
23. உரசினால் சீறுமா? பென்ஸ் ஒரு முறைச் சொன்னாரு.. உரசாதே தீக்குச்சியே பற்றி எரியப் போவது நீதான் அப்படின்னு. ஆனா நோக்கச் சிலை -லை அதிகமா இருக்கே... சரியா ?
24. அம்மி.. குழவி...(மம்மி - குழந்தை பரவாயில்லை)
25 யோசிச்சிட்டு வர்ரேன்... (கம்பு போல இருக்கு...)
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
21 முடல் 24 வரை சொன்ன விடைகள் சரியே.
மறைமொழிகளைக் கொஞ்சம் 'தைரியப் படுத்தி யிருக்கிறேன்'!
25. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
தஞ்சாவூர் பொம்மை..
நான் முதலில் ஊன்றுகோலையும் நாணலையும் எண்ணினேன்... ஒத்தும் வரலை அதே சமயம் மறைமொழி முதல் வரியில் இருப்பதால் இரண்டாம் வரியையே உத்துப் பார்த்து குழம்பிப் போயிட்டேன்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks