ஆசான்களுக்கு நல்வாழ்த்துகள்!

யோசிக்க பிறந்து
யாசிக்க துணிந்து
நேசிக்க மறந்து
காசுக்காக வாழும் மானிடா!

அன்பு மலர்ந்து
அருள் விரிந்து
கருணை கனிந்து
நீ வாழும் அந்நாளே

அறம் செழித்து
மறம் நிலைத்து
கரம் உயர்ந்து
திறன் செழிக்கும் நன்னாள்!

அப்பொன்னாள்
கருவாகி உருவாக
எந்நாளும் உழைத்திடும்
எங்கள் ஆசான்களுக்கு
நல் வாழ்த்துகள்!

- அக்னிப்புத்திரன்