Results 1 to 5 of 5

Thread: பெயர்க் குழப்பம்....

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0

    பெயர்க் குழப்பம்....

    கிழமை & நேரம் : ஞாயிறு காலை 11 மணி

    "படாரென்று கதவை அடித்தவாறேஅவரது வீட்டிற்கு உள்ளே வந்தார் மேனேஜர் கணேஷ். என்னய்யா ஆளுங்க இவங்க. அடுத்த மாசம் வேலைய முடிக்கணும்; இவ்வளவு மெதுவா வேலை செய்யறாங்க. இருக்கட்டும், சொன்ன நேரத்துல டெலிவரி ஆகல, இவங்க போனஸ்ல கைய வச்சிடறேன். அப்பத்தான் புத்தி வரும்", சே! என்று சீறியவாறே கைபேசியை எடுத்தார்.

    அப்போது அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. "டேய் மச்சி. வாடா டீ குடிச்சிட்டு வரலாம்",என்று அவருக்கு கீழே வேலை செய்யும் ரமேஷ் அனுப்பியிருந்தார். மேனேஜரோ கோபப்பட இடம் வைக்காமல், உடனே அடுத்த குறுஞ்செய்தி அவரிடமிருந்தே வந்தது, "மன்னிக்கவும், என் நண்பன் கணேஷ்க்கு அனுப்பறதுக்கு பதிலா, உங்களுக்கு அனுப்பிட்டேன்".

    கைபேசியை கீழே வைத்து விட்டு வளர்பிறை நிலவாய் கோபம் அடைய ஆரம்பித்தார்.கோபமது பௌர்ணமியாக மாறிய உடன் மீண்டும்
    கை பேசியை எடுத்து ரமேஷுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.

    கணேஷ்: உனக்கு கண்ணும் இல்லை. நிச்சயம் நீ செய்யும் வேலையில் கவனமும் இருக்காது.

    ரமேஷ்: நான் எந்த தவறும் செய்யவில்லையே..

    கணேஷ் : என்னிடமே பொய் பேசுகிறாயா? உனக்கு போனஸ் கிடையாது.

    ரமேஷ் : நான் தான் பொய் பேசவில்லையே...

    கணேஷ் : அகம்பாவம் பிடித்தவனே உனக்கு இன்க்ரிமென்ட் கிடையாது...

    ரமேஷ் : அனால் நான் மிகவும் பணிவுடன் தானே பேசுகிறேன்...

    கணேஷ் : நான் நினைத்தால் உனக்கு வேலையே இல்லாமல் செய்து விடுவேன்...

    ரமேஷ் : மன்னிக்கவும். அந்த அளவுக்கு உங்களை கோபப்படுத்தும் விதமாக நான் ஒன்றும் செய்யவில்லையே..

    கணேஷ் : ஒன்றும் செய்யவில்லையா? எவ்வளவு தைரியம் இருந்தால், வேறொரு கணேஷுக்கு பதில், எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவாய்? செய்யும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், இவ்வாறு உன் நண்பன் கணேஷுக்கு பதில் எனக்கு அனுப்புவாயா? ஒரு குறுஞ்செய்தி கூட உருப்படியாக அனுப்பத் தெரியாத உனக்கெல்லாம் எதுக்கு வேலை? பேசாமல் வேலையை விட்டு விட்டு போய் விடு ரமேஷ்...

    ரமேஷ்: முட்டாள்! நான் உன் சீனியர் மேனேஜர் ரமேஷ். முதலில் ஒழுக்கமாக நீ உன் ஜூனியர் ரமேஷுக்கு செய்தி அனுப்பு....

    கணேஷ்: ???!!!??? (கோபம் பௌர்ணமியிலிருந்து அமாவசையாய் மாறி விட்டது!!!)
    Last edited by arun karthik; 07-09-2013 at 07:19 PM.

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. நிறைய விஷயங்களை நேரில் பேசாததால்....பல விஷயங்களில் நாம் இழப்பை சம்பாதிக்கிறோம்.

    வாழ்த்துக்கள் கார்த்திக்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஹா, ஹா..!!

    அவ்வப்போது இது போன்ற தவறான தகவல் பரிமாற்றங்கள் நடந்து விடுவது என்னவோ உண்மைதான்..!!

    வாழ்த்துகள் அருண் கார்த்திக்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    ஒரே பெயரில் பலர் இருப்பதால் இது போல நிஜ வாழ்வில் கூட நடப்பது சாத்தியமே.

    முக்கியமான தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் குறுஞ்செய்தி வசதியை பயன் படுத்துவதோடு, எந்த காரணத்தை முன்னிட்டும் பிறர் மனம் நோகச்செய்யும் கருத்துக்களை குறுஞ்செய்தி மூலம் பரிமாறிக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.

    பதிவுக்கு நன்றி

    மும்பை நாதன்

  5. Likes arun karthik liked this post
  6. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மனம் ஒருநிலையில் இல்லாதபோது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பதும் குறை கூறுவதுமாக இருந்து, ஒரு பிரச்சனை பல பிரச்சனைகளுக்கு வித்தாகிவிடும். அதுவே சற்று நிதானமாக யோசித்தால் எல்லாம் சுமுகமாக முடிந்துவிடும்.

    சொன்ன நேரத்தில் வேலை முடியவேண்டுமே என்ற பதைப்பில் இருக்கும்போது வந்த குறுஞ்செய்தி கணேஷை எரிச்சலூட்டியதில் தவறில்லை. ஆனால் கணேஷ் அந்த சூழலை நிதானமாக கையாண்டிருக்கவேண்டும். உண்மையிலேயே அது தொழிலாளியாயிருந்தாலும் அந்த நேரத்தில் கோபத்தைக் காட்டக்கூடாது.

    தொழிலாளர்கள் ஒன்றுகூடி வேலை நிறுத்தம் என்று போராட்டத்தைத் துவங்கிவிட்டால் உள்ளதும் போய்விடுமே. எனவே எந்த சூழ்நிலையிலும் நிதானம் அவசியம். நல்ல பாடம்தான். இனி எச்சரிக்கையாயிருப்போம் எல்லோருமே. சுவையான கதைக்குப் பாராட்டுகள் அருண் கார்த்திக்.

  7. Likes dellas, arun karthik liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •