மழையை
நேசிக்கிறேன்
கையில்
குடையுடன்..
மழையை
நேசிக்கிறேன்
கையில்
குடையுடன்..
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
அழகான படம்.
நான்கு வரிகளில் இன்றைய உலகின் வாழ்க்கைமுறையை சொன்னக் கவிதை “நச்”
வாழ்த்துக்கள் தங்கையே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மந்தமிட்ட வானம் பார்த்து மனத்துக்குள் குடைய
கிளம்பும்போதே கையில் திணித்துவிட்டாள் குடையை!
அன்புமழையில் சொட்டச் சொட்ட நனைக்கும் தாயவளுக்கு
வான்மழை மகளை நனைப்பது மாத்திரம் நட்டமாம்!
சாரல் வடிவிலும் சன்னமாய்த் தொடவும் விடாது
சரசரவென்று அடைக்கிறாள் சன்னல்களை!
மழை ரசிக்கும் மனம் அவளுக்குமிருக்கலாம்,
மழை நனைக்கும் ஆவல் அவளுள்ளுமிருக்கலாம்.
வீட்டுவேலைகளை விசிறியடித்துவிட்டு
கொட்டுமழையில் சுற்றிச்சுழன்றாட
உள்ளுக்குள்ளொரு உத்வேகம் எழுந்திருக்கலாம்,
எல்லாவற்றையும் மறைத்தபடி வேலையில் மூழ்குகிறாள்,
பின்னாளில் தேவையென்றே பெண்ணையும் பழக்குகிறாள்.
கையில் குடையுடன் மழைநேசிக்கும் கலைபோல்
வாழ்க்கையில் எதிலும் எச்சரிக்கை கற்றுத்தருகிறாள்.
நேசிக்கும் மழையினை வெறுத்திடும் உடலுடன் மோதி வீழ்ந்த மனம் குடைபிடித்து ரசிக்கிறது ..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
மெல்லிய அத்துமீறல் என்றும் சுகம்!
உடை நனையாதிருக்க ஒரு கையில் குடை
தூறும் மழையால் ஊறும் மகிழ்ச்சியை உள்வாங்க
அத்துமீறி நீளும் மறுகை!
எச்சரிக்கை நிதர்சனம்!
என்றென்றும் நட்புடன்!
பெண்கள் எப்பவுமே இப்படித்தான்..
முத்தமிட நான் கேட்டபோதும்
அவள் கையைத்தானே நீட்டினாள்!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அழகு!
எதிலும் அமிழ்ந்து விடாமல் வெளியிலிருந்து
பார்த்து ரசிக்கக் கற்றுக் கொண்டால்
மழை மட்டுமல்ல வாழ்க்கையும் அழகுதான்
அழகு!
எதிலும் அமிழ்ந்து விடாமல் வெளியிலிருந்து
பார்த்து ரசிக்கக் கற்றுக் கொண்டால்
மழை மட்டுமல்ல வாழ்க்கையும் அழகுதான்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks