Results 1 to 5 of 5

Thread: குளிர்காலக் காலை!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0

    குளிர்காலக் காலை!

    பொன்னொளி வீசும் கதிரவனும்,
    காலையில் பூத்த புதுமலரும்,
    மகரந்த வாச வசப்பட்ட பொன்வண்டுகளும்,
    வெண்புகை பரப்பிய பனிப்பொழிவும்,
    ஆனந்தக் கூத்தாடும் அணில்களும்,
    ஆரவாரமாய் பாடும் பறவைகளும்,
    விளக்கணைக்காமல் சுற்றும் விட்டில்களும்,
    விவரம் தெரியாமல் கூவும் சேவல்களும்,
    இதனிடையே என்னவள் முறித்த சோம்பலும்,
    அழகாக்கி விட்டன என் குளிர் காலக் காலையை!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    குளிர்கால காலையை இளம்காளையின் பார்வையில் இதமாய் படம்பிடித்த வரிகளை வாசிக்கும்போதே ஜில்லிட்டு போகிறது.. வாசகனின் மனது..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    என் கவிதை உங்களை அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி சுகந்தப்ரீதன். மனமார்ந்த நன்றிகள்...

  4. #4
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    அவள் ஜோராய் முறித்தது சோம்பல்!
    இங்கே நூறாய் தெறித்தது என் இதயம்!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  5. Likes arun karthik liked this post
  6. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by arun karthik View Post
    பொன்னொளி வீசும் கதிரவனும்,
    காலையில் பூத்த புதுமலரும்,
    மகரந்த வாச வசப்பட்ட பொன்வண்டுகளும்,
    வெண்புகை பரப்பிய பனிப்பொழிவும்,
    ஆனந்தக் கூத்தாடும் அணில்களும்,
    ஆரவாரமாய் பாடும் பறவைகளும்,
    விளக்கணைக்காமல் சுற்றும் விட்டில்களும்,
    விவரம் தெரியாமல் கூவும் சேவல்களும்,
    இதனிடையே என்னவள் முறித்த சோம்பலும்,
    அழகாக்கி விட்டன என் குளிர் காலக் காலையை!!!
    ஒன்பதாம் வரியில் உள்ளத்தை கொள்ளை கொண்ட கவிதையை படைத்ததற்கு பாராட்டுக்கள்.

  7. Likes arun karthik liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •