ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் மலைப் பாங்கானப் பகுதியில் நடத்து
சென்று கொண்டு இருந்தான். ஒரு மரத்தின் வேர் அவனது காலில் பட்டு மலையின்
கீழே விழ நேர்ந்தது. கீழே உருளும் போது மனதில் சிறியப் பயம் உருவாகியது.
அவன் நினைத்தான் கடவுள் என்று ஒருவர் இருந்தால் என்னைக் காப்பாற்றட்டும்
என்று. அவன் நினைத்தவுடன் ஒரு மரக் கிளைத் தடுத்து அவன் தொங்கி கொண்டிருந்தான். அப்போது அவன் மனம் நினைத்தது நாம் கடவுளை
அரைகுறையாக நம்பினோம் அரைகுறையாக காப்பாத்தப்பட்டோம் முழுமையாக நம்பினால்
முழுவதுமாக காப்பாத்தப்படுவோம் என்று நினைக்க ........
மேலிருந்து ஒரு சப்தம் கேட்டது மகனே இப்போதவது நீ நம்புகிறாயா? .... சரி நீ என்னை (கடவுள்) அரைகுறையாக நம்பினாய் அரைகுறையாக காப்பாத்தப்பட்டாய் நீ என்னை
முழுவதுமாக நம்பினாய் என்பதற்கு மரக் கிளையிலிருந்து கையை எடு நான் உன்னை
மீண்டும் காப்பாத்துகின்றேன் என்றது.
நம்மில் எதனைப் பேர் கையை விடுவோம்...
கையை எடுப்பது அல்லது
எடுக்காமல் இருப்பது அதுவே நீங்கள் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை.
********சொற்பொழிவாளர்.திரு.சுகி.சிவம் அவர் அண்ணாமலையார் அற்புதங்கள் என்ற ஒலி நாடாவில் சொல்லியது ************
Bookmarks