உன்னைக் காணும் வரை...
பாதி உலகமே முழுதென்று
வாதிட்டவன் நான்
உன்னைக் காணும் வரை...
நினைவுகளின் எல்லாத் துகள்களிலும் நீ..
வெற்றிடம் என் மன அறை
உன்னைக் காணும் வரை...
விரலாலும் இதழாலும்
வீணை மீட்டியதில்லை
உன்னைக் காணும் வரை...
அடுத்த நாளுக்காய்
அன்புத்தவம் இருந்தவனில்லை
உன்னைக் காணும் வரை...
Bookmarks