கம்பனே ! உன்னுடைய
கற்பனையைக் கொஞ்சம் கடன் தா !
கவிஞனாக ஆசைப்படுகிறேன்.
கார்முகிலே ! உன்னுடைய
வாரி வழங்கும் வள்ளன்மைக் கடன் தா !
பாரியாக ஆசைப்படுகிறேன்.
தென்றலே ! உன்னுடயை
கைகளைக் கொஞ்சம் கடன் தா !
கட்டியணைக்க ஆசைப்படுகிறேன்.
ஆலமரமே ! உன்னுடைய
விழுதுகளைக் கொஞ்சம் கடன் தா !
உறவுகளைத் தாங்க ஆசைப்படுகிறேன்.
தமிழே ! உன்னுடைய
இளமையைக் கொஞ்சம் கடன் தா !
இறவாதிருக்க ஆசைப்படுகிறேன்.
மகாத்மாவே! உன்னுடைய
புனித உள்ளத்தைக் கடன் தா !
மனிதனாக ஆசைப்படுகிறேன்.
Bookmarks