கவிதைப் போட்டியில்
அவன் அவளோடு
மோதினான் - அவன்
மொழிகளால் சொன்ன
கவிதையை விட
அவள் விழிகள் சொன்ன
கவிதையே வென்றது
கவிதைப் போட்டியில்
அவன் அவளோடு
மோதினான் - அவன்
மொழிகளால் சொன்ன
கவிதையை விட
அவள் விழிகள் சொன்ன
கவிதையே வென்றது
Last edited by அன்புரசிகன்; 26-09-2007 at 10:27 AM. Reason: யுனிக்கோடாக்கல்
இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
- அன்புடன் லாவண்யா
அருமை லாவண்யா அவர்களே அருமை.
விழியீர்ப்பு விசையைப் பற்றி
எத்தனை படித்தாலும்
அத்தனையும் சுகந்தான்..
.விழிகள் விசித்திரத் தரகர்கள்.
கூலி இல்லாமலே
இதய மாற்று
வியாபாரம் செய்யும்
வித்தகர்கள்.
அவளைக் கைதுசெய்யுங்கள்.
விழியெங்கும் போதைப்பொருள்.
என் கருங்கல் இதயத்தை
உப்புக்கல்லாய் கரைத்தாயே
உன் விழியில் வழிவது
ராஜ திராவகமா....
Last edited by அன்புரசிகன்; 26-09-2007 at 10:28 AM. Reason: யுனிக்கோடாக்கல்
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அட............ எவ்வளவு எளிமையான நடை!!!
உங்க கவிதையை சொன்னேன்!!
இளசுவின் கவிதை இனிமை
Last edited by அன்புரசிகன்; 26-09-2007 at 11:01 AM. Reason: யுனிக்கோடாக்கல்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
பாராட்டுக்கள் அண்ணனுக்கும் அருமை அக்காவுக்கும்!!!
Last edited by அன்புரசிகன்; 26-09-2007 at 11:10 AM. Reason: யுனிக்கோடாக்கல்
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
அழகு லாவண்யாவின் சிறுகவிதை..
இனிமை இளசுவின் பதில் கவிதை
Last edited by அன்புரசிகன்; 26-09-2007 at 11:20 AM. Reason: யுனிக்கோடாக்கல்
கவிதை வருவதெ காதலால் தனே.....
விஷ்ணு
Last edited by அன்புரசிகன்; 26-09-2007 at 11:40 AM. Reason: யுனிக்கோடாக்கல்
தூண்டில் புழு உன் கண்..
சிக்கிய மீன் நான்.
உன் ஓர விழிப் பார்வை
எனும் கத்தி எறியாதே..
ஏற்கனவே என் இதயம்
கிழிந்து..
பாராட்டுக்கள் லாவண்யா..
Last edited by அன்புரசிகன்; 26-09-2007 at 11:40 AM. Reason: யுனிக்கோடாக்கல்
லாவண்யாவை பாராட்டும் சாக்கில் அடடா ஆளுக்கு ஒரு கவிதை
அவிழ்த்து விடுகிறார்களே?
இப்போது தான் தெரிகிறது எத்தனை பேர் "கண்ணடி" பட்டு
இருக்கிறார்கள் என்று.
Last edited by அன்புரசிகன்; 26-09-2007 at 11:45 AM. Reason: யுனிக்கோடாக்கல்
யாரங்கே!!!லாவண்யாவை பாராட்டும் சாக்கில் அடடா ஆளுக்கு ஒரு கவிதை
அவிழ்த்து விடுகிறார்களே?
இப்போது தான் தெரிகிறது எத்தனை பேர் "கண்ணடி" பட்டு
இருக்கிறார்கள் என்று.
எனக்குப்போட்டியாக?
நான் நாரதரா இல்லை நீங்களா??
இராசகுமாரனிடம் முறையிடுவேன்!! கவனம்!!! :lol: :lol:
Last edited by அன்புரசிகன்; 26-09-2007 at 11:45 AM. Reason: யுனிக்கோடாக்கல்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
விழிகள் சொன்ன கவிதை
வென்றது - யாரை?
மொழிகள் சொன்ன கவிஞனையா?
இல்லை, பரிசுகள் வழங்க
வந்த நடுவனையா?
பார்வையாளானாக வந்த
ஆயிரமாயிரம் ரசிகனையா?
வெல்லப்பட்டது யாராகிலும்
தோற்றவர்க்கு சுகமே.........
Last edited by அன்புரசிகன்; 26-09-2007 at 11:46 AM. Reason: யுனிக்கோடாக்கல்
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
லாவண்யாவின் வரிகளை சற்றே மாற்றியிருக்கிறேன் (மன்னிக்கவும்)
"கவிதைப் போட்டியில் அவனும் அவளும்
அவள் வென்றாள்... கண்கள்"
Last edited by அன்புரசிகன்; 26-09-2007 at 11:47 AM. Reason: யுனிக்கோடாக்கல்
கவிகள் விளையாடும் கவி விளையாட்டுக்களை இரசித்தேன். பாராட்டுக்கள். எல்லோருடைய சின்னச்சின்ன கவிதைகளும் நன்றாக இருந்தது. நண்பன் அவர்களின் கேள்விக்கவிதையும் அருமை. யாரை விழி சொன்ன கவிதை வென்றது.
Last edited by அன்புரசிகன்; 26-09-2007 at 11:54 AM. Reason: யுனிக்கோடாக்கல்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks