இலை உதிர்ந்த மரங்கள் .......
இவள் கரம் பட்டு தளிர்விடுகிறது ....
இது காலத்தின் மாறுதலா ....????? இல்லை
இவள் பெண்மையின் பிரதி பலிப்பா ......?????
கரை தொட்ட அலைகள் ...
மறுமுறை தீண்ட காத்திருக்கும் ....
கரையாக இவள் கரம் தீண்ட ....
காத்திருக்கிறேன் .....!!!!!
மரம் தேடும் பறவையாக .....
அலை தேடும் கரையாக .....
மழை தேடும் பயிராக .....
ஓளி தேடும் இரவாக ....
ஸ்வரங்கள் தேடும் இசையாக ....
சிலைகள் தேடும் உளியாக ....
மலர்தேடும் வண்டாக ....
தேடி அலைகிறேன் ....!!!!!!
இவளுள் தொலைந்த என் இரவுகளையும் ...
உறங்கங்களையும் ....
விடியும் வரையல்ல இவள் விழியில் .....
கரையும்வரை தேடி கொண்டிருபேன் .....!!!!!
கம்பன் பாடாத கவியும் .....
வள்ளுவன் எழுத குறளும் ....
அகத்தியர் இயற்றாத தமிழும் ....
இவள் பேச்சின் இனிமையில் கண்டேன் ....!!!!
செந்தமிழும் செவ்வாழையாய் இனிக்க ....
பழந்தமிழும் பருவம் கொண்டு ....
எனை தூண்டுகிறது ......
இலக்கணம் அறிய எனை .......
இவள் பற்றி கவிதை எழுத ....!!!!!
Bookmarks