Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: ஆதலினால் செய்த காதலிது!

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    ஆதலினால் செய்த காதலிது!

    வீம்பு பிடித்த நம் இருவருக்கிடையில்
    தானும் வீறாப்பாய் அமர்ந்துகொண்டு
    நம்மைப்பார்த்து நகைத்துக்கொண்டிருக்கிறது
    நமக்கே உரித்தான நம் காதல்!

    சீண்டுவாரற்று சித்தம் சலித்ததோ?
    சின்னக்குழந்தை போல் மெல்ல ஊர்ந்து
    விளையாடவருகிறது நம்மிடத்தில்!

    விரட்டலும் விலக்கலுமின்றி
    பாராமுகமாய் ஊடித்திரியும் நம்மிடையே
    ஒளிந்துவிளையாடும் காதலுக்கு
    ஒருவரிடமும் வரவேற்பில்லை.

    நாளெல்லாம் ஒற்றையாய்
    ஆடிக்களைத்து அருகமர்ந்த காதலை
    போதும் விளையாட்டென்று
    வாரியணைத்துக்கொள்கிறேன் வாஞ்சையுடன்!

    காத்திருந்தாற்போல் நீயும்....
    கைகொள்ளாது அள்ளிக்கொள்கிறாய்
    காதலோடு என்னையும்!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    ஊடலின் பின்னே
    காதல் வலிமை பெரும்
    உண்மைக் காதால் இதுவென
    உணரும் தருணம்
    குழந்தைபோல் கொஞ்சி மகிழ
    உலகமே மறந்துபோகும்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    நந்தனத்திற்கு ஒரு நாள் நன்பரை பார்க்கப்போயிருந்தேன் படிக்கட்டுப்பால்கனியிலிருந்தபடி பராக்குபார்த்திருந்தேன்
    அசோகமரத்தின் கிளைகளினுடே மின்சாரக்கம்பிகள் பாய்ந்திருந்தது மஞ்சளொளி படர்த்தும் மின்சார விளக்கின் வெளிச்சத்தில்
    கம்பிகளொன்றில் ஒரு காகம் கண்சொருக அமர்ந்திருந்தது
    அருகிலொரு காகம் முக்கை சரக் சரக்கென்றே அடிக்கடி திருப்பி அந்த காகத்தை பார்த்துக்கொண்டே தானும் கண்னை முடிக்கொண்டே தூங்கும் பாவனையிலிருந்தது
    நிச்சலனமான நேரம்..சில கனங்களிருக்கும் திடீரென முதல் காகம் விலுக்கென்று விழித்தெழுந்து சர்ரென்று எழும்பி பறந்தது கூடவே அருகிலிருந்த காகமும்
    சற்றுநேரம் நான் திகைத்திருந்தேன் அந்த சலனத்திற்க்கு காரனம் புரியாமல். சில நிமிடங்கள் பொருத்து திரும்பவும் அந்த இரு காகங்களும் அதே போல் அமர்ந்திருந்தன கமபியில் அருகருகே. அப்போது உணர்ந்து கொண்டேன் காதலென்பது அருகிலிருத்தல்

    புரிந்தபின் அருகிலிருந்தால் போதும் காதல் கசிந்துருகி கலந்தலாகி மௌனத்தில் அமர்ந்தே இருவரையும் இறுக்கிக்கொள்ளுமென்பதை நிருபிக்கும் அந்த காகங்களைப்போலே உங்கள் கவிதையும்.

    இதயம் கிளரும் வார்ததைகள்.... நன்றி கீதமவர்களே!
    என்றென்றும் நட்புடன்!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    மோதலுடன் கூடும் ஊடலிநூடே தொடர்ந்ததால் செய்த காதலிதோ !. மோதலுடனான காதல் கொண்ட இருமன பிணைப்பை விவரிக்கும் வரிகள் அருமை .
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    வீம்பு பிடித்த நம் இருவருக்கிடையில்
    தானும் வீறாப்பாய் அமர்ந்துகொண்டு
    நம்மைப்பார்த்து நகைத்துக்கொண்டிருக்கிறது
    நமக்கே உரித்தான நம் காதல்!

    கீதம் அவர்களின் கவிதையும் . பிள்ளையின் பின்னூட்டமும் இதயம் தொட்டன... வாழ்த்துகள் !!
    LIVE WHEN YOU ARE ALIVE !

  6. Likes கீதம் liked this post
  7. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    காதலை, முதலில் யார் தெரிவிப்பது என்பதில் காதலன், காதலிக்கு இடையே ஒரு போராட்டம். ஊடலில் தோற்றவர் வென்றார் என்பது வள்ளுவன் வாக்கு. அதுபோல காதலை முதலில் யார் தெரிவிக்கிறார்களோ அவரே வென்றவர் ஆவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கீதம் தந்த ஒரு நல்ல கவிதை.

    விரட்டலும், விலக்கலும் ஒரே பொருளைத் தரும் வார்த்தைகள். அதற்குப் பதிலாக

    விலக்கலும், சேர்த்தலும் இன்றி என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    அனுபவித்தது வார்த்தைகளில் வெளியாகி உள்ளது...

    தங்கை கீதமின் மற்றொரு முத்திரை...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  9. Likes கீதம் liked this post
  10. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    சில கவிதைகள் அனுபவித்து வாசிக்க படுகின்றன... அதில் தன்னை தினித்து வாசிக்கும் போது கவிதையோடும் காதல் வந்துவிடுகிறது...


    காதலை இத்தனை அழகாக ஒரு சிலரால் மட்டுமே ரசிக்க வைக்கமுடியும்...
    இங்கு உங்களாலும்...


    வாழ்த்துகள் கீதம்..
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  11. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Nivas.T View Post
    ஊடலின் பின்னே
    காதல் வலிமை பெரும்
    உண்மைக் காதால் இதுவென
    உணரும் தருணம்
    குழந்தைபோல் கொஞ்சி மகிழ
    உலகமே மறந்துபோகும்
    அழகான கவிப்பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி நிவாஸ்.

  12. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    நந்தனத்திற்கு ஒரு நாள் நன்பரை பார்க்கப்போயிருந்தேன் படிக்கட்டுப்பால்கனியிலிருந்தபடி பராக்குபார்த்திருந்தேன்
    அசோகமரத்தின் கிளைகளினுடே மின்சாரக்கம்பிகள் பாய்ந்திருந்தது மஞ்சளொளி படர்த்தும் மின்சார விளக்கின் வெளிச்சத்தில்
    கம்பிகளொன்றில் ஒரு காகம் கண்சொருக அமர்ந்திருந்தது
    அருகிலொரு காகம் முக்கை சரக் சரக்கென்றே அடிக்கடி திருப்பி அந்த காகத்தை பார்த்துக்கொண்டே தானும் கண்னை முடிக்கொண்டே தூங்கும் பாவனையிலிருந்தது
    நிச்சலனமான நேரம்..சில கனங்களிருக்கும் திடீரென முதல் காகம் விலுக்கென்று விழித்தெழுந்து சர்ரென்று எழும்பி பறந்தது கூடவே அருகிலிருந்த காகமும்
    சற்றுநேரம் நான் திகைத்திருந்தேன் அந்த சலனத்திற்க்கு காரனம் புரியாமல். சில நிமிடங்கள் பொருத்து திரும்பவும் அந்த இரு காகங்களும் அதே போல் அமர்ந்திருந்தன கமபியில் அருகருகே. அப்போது உணர்ந்து கொண்டேன் காதலென்பது அருகிலிருத்தல்

    புரிந்தபின் அருகிலிருந்தால் போதும் காதல் கசிந்துருகி கலந்தலாகி மௌனத்தில் அமர்ந்தே இருவரையும் இறுக்கிக்கொள்ளுமென்பதை நிருபிக்கும் அந்த காகங்களைப்போலே உங்கள் கவிதையும்.

    இதயம் கிளரும் வார்ததைகள்.... நன்றி கீதமவர்களே!
    ரசிக்கவைத்தப் பின்னூட்டம். உடல்களை விலக்கி, மனங்களை நெருக்கி உடன்விளையாடும் ஊடல் கலையிதுவல்லவா? நன்றி கும்பகோணத்துப்பிள்ளை.

  13. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    மோதலுடன் கூடும் ஊடலிநூடே தொடர்ந்ததால் செய்த காதலிதோ !. மோதலுடனான காதல் கொண்ட இருமன பிணைப்பை விவரிக்கும் வரிகள் அருமை .
    ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ஜெய்.

  14. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by rema View Post
    கீதம் அவர்களின் கவிதையும் . பிள்ளையின் பின்னூட்டமும் இதயம் தொட்டன... வாழ்த்துகள் !!
    ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரேமா.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •