Results 1 to 2 of 2

Thread: நாயை பார்த்து கற்று கொள்ளுங்கள்...

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    16 May 2013
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    9,252
    Downloads
    4
    Uploads
    0

    நாயை பார்த்து கற்று கொள்ளுங்கள்...

    நாயை பார்த்து கற்று கொள்ளுங்கள்...

    ஞானி ஒருவர் தான் ஞானம் பெற்றதுக்குக் காரணம் ஒரு நாய் தான் எனக் கூறி அதை விளக்கினார்...

    ஒரு நாள் குளக்கரை அருகே அமர்ந்திருந்தேன*்.ஒரு நாய் தாகத்துடன் நீர் அருந்த வந்தது.வேகமாய் நீர் குடிக்கச் சென்ற நாய் குரைத்துக் கொண்டே சட்டெனப் பின் வாங்கியது.

    சிறிது நேரம் இவ்வாறே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்த நாய்,தாகம் அதிகரித்தவுடன் துணிச்சலுடன் தண்ணீரில் வாய் வைத்துக் குடிக்க ஆரம்பித்தது.அப்*போதுதான் அது உணர்ந்தது,இதுவர*ை தண்ணீரில் தெரிந்தது தன் பிம்பம்தான் என.அதுவரை நாய் தயங்கியதற்குக் காரணம் அதன் உருவமே.

    இதனால் ஞானத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கும் விளக்கம் கிடைத்தது.நான் ஞானம் அடையத் தடையாய் இருப்பது,'நான்'*தான் என்பதை உணர்ந்தேன்.அந்த* 'நான்'என்ற அகந்தையை ஒழித்தபோது ஞானியாகி விட்டேன்.

    இப்ப எல்லாம் விலங்குகள் தான் நமக்கு நல்ல விஷயத்தை சொல்லி கொடுக்கின்றது.ஆ*னால் நாம் தான் பல நேரங்களில் விலங்குகளாக மாறி வருகிறோம்.

  2. #2
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    நல்ல நாய்த்துவம்

    விலங்குகள் மனிதர்களைவிட ஆபத்தானவைகள் அல்ல!
    என்றென்றும் நட்புடன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •