வணக்கம் ,
நான் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவன் ...பொறியியல் முடித்துவிட்டு ஒரு வருடம் சென்னைக்கு வந்து வேலை தேடி நொந்து போய் வாழ்க்கை வெறுத்து போயிருந்தேன் . அப்பொழுது அதிர்ஷ்டமா? இல்லை சாபமா?? என்று தெரியவில்லை TANCET தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து ஒரு சிறந்த கல்லூரியில் முதுகலைப் பட்ட படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்து , இப்பொழுது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது , மீண்டும் வேலை தேட வேண்டுமே என்ற கவலையோடு என் வாழ்கையை கடத்தி வருகிறேன் . தமிழ் மீது சிறு வயது முதல் இருந்த ஆர்வமும் எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்களும் என்னை இந்த WEBSITE வரை இழுத்து வந்து உள்ளது .
இப்படிக்கு
ராம் குமார் முருகன்
Bookmarks