காலையில் பனித்துளி புல்மிசை உறங்கும்
......கண்மணிக் குழந்தை தூளியில் உறங்கும்
சோலையில் வண்டினம் பூவிடை உறங்கும்
......சோதியின் நிலவில் விண்மீன் உறங்கும்
மாலையில் கதிரவன் கடலிடை உறங்கும்
......மன்மதன் அம்புகள் என்னை வருத்துமுன்
வாலைக் குமரியே !உந்தன் மார்பினில்
......மெல்லச் சாய்ந்து நானும் உறங்கவோ ?
Bookmarks