Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: இப்படித்தான் இன்றைய வாழ்க்கை

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0

    இப்படித்தான் இன்றைய வாழ்க்கை

    அந்த டீ பையன் விற்கும் கொண்டு வந்த
    டீயின் நறுமணத்தில் கண் விழித்தான் பூபதி, சரியாக சேவல்
    அறைக்கூவல் விடுத்து மூன்று மணி நேரம் கழித்து.

    இரண்டு அடி நடந்தான். குளியலறை வந்தது. ஒரு பொத்தானை
    அழுத்தினான். வெது வெதுவென்று நீர் வந்தது. குளித்து முடித்து
    வெளியே வந்து ஒரு கால் செய்தான்.ஐந்து நிமிடத்தில் பிஸா அவன்
    மேசைக்கு வந்தது. ஐயோ அதிகமாக பசிப்பதற்கு மாலை மருத்துவரை வேறு சந்திக்க
    வேண்டுமா என்று சலித்தவாறே காலை உணவு உண்டான்.

    நான்கு அடி நடந்தான். அவன் வண்டி வந்தது. வண்டியை எடுத்து
    அழுத்தினான். அரை மணி நேரத்தில் அலுவலகம் வந்தது. அடுத்து
    ஐந்து அடி நடந்தான். லிப்ட் வந்தது. அதில் ஏறினான். நேரே
    அலுவலக அறையை அடைந்தான். அமர்ந்தான்; வேலை செய்தான்,
    செய்தான் செய்து கொண்டே இருந்தான். இவ்விதம் இவன் ஒன்பது
    அடி தொலைவில் அலுவலகம் அடைந்தான்.

    மாலை வந்தது. அவன் புதிதாக வாங்கவிருக்கும் கார் கடைக்காரர்,
    அவரது புதிய கார் புகைப்படத்தை மெயில் அனுப்பினார். அதை பார்த்து
    மகிழ்ந்து விட்டு மருத்துவரை சந்திக்க ஆயத்தமானான். வழக்கம் போல் எட்டு
    அடி தொலைவில் மருத்துவமனையை அடைந்து மருத்துவரையும்
    சந்தித்தான்.

    மருத்துவர் அவனை முழுவதுமாக பரிசோதித்து விட்டு, சார் உங்களுக்கு
    ரத்தத்துல சர்க்கரை நோய் அறிகுறி இருக்கு. இனி மேல் நீங்க பத்தியமா
    இருக்கணும். எல்லா பக்கமும் நடந்தே தான் போகணும். உடற்பயிற்சி
    முக்கியம். தினமும் காலைல ஒரு மணி நேரமாவது நடக்கணும் என்று
    கூறினார்.

    "சரிங்க டாக்டர். உங்க பீஸ் என்ன?என் கிட்ட மொபைல் பாங்கிங்
    இருக்கு. இப்பவே உங்களுக்கு பணம் அனுப்பிடறேன். இல்லேன்னா
    இதுக்காக நான் ATM போகணும்" என்றான் பவ்யமாக..
    Last edited by arun karthik; 09-05-2013 at 05:49 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    உண்மையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இங்கு உண்மையான வளர்ச்சியா இல்லை மனிதனை சோம்பேறிகளாக்கிவிட்ட பலவீனமா? என்பதே மிகப்பெரிய விவாதத்துக்குரிய விடயமாகிவிட்டது.

    குறிப்பாக வீட்டில் பெண்கள் பலர் சாதாரணமாக செய்யக்கூடிய வேலைகளுக்கெல்லாம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் சிறிதுகாலத்தில் உடல் பருமனாகி வியாதிகளினால் அல்லல் பட்டு பின்னர் தினமும் ஒருமணிநேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் உடற்பயிற்சி நிலையம் செல்கிறநிலை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானா, இதில் மருத்துவ ஆலோசனைக்கு, உடற்பயிற்சி நிலையத்திற்கு அல்லது உடற்பயிற்சி உபகரனக்களுக்கு என்று தனித்தனியே பண விரயம் செய்வது புத்திசாளிதனம்தானா?

    இதற்க்கான விடைதான் என்ன?

    அருண் கார்த்திக், நீங்கள் என்ன நினைத்து இதை எழுதினீர்களோ ஆனால் இவை இன்றைய மக்களால் நன்கு உணரப்பட வேண்டிய விடயம் என்பதுமட்டும் மறுக்க இயலாத உண்மை.

    பாராட்டுகள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. Likes arun karthik liked this post
  4. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    என்ன செய்வது. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. இதுதான் இன்றைய வாழ்க்கை.

  5. Likes arun karthik liked this post
  6. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய பலர் ஆயத்தமாகிக்கொண்டு இருக்கின்றனர்.

  7. #5
    புதியவர்
    Join Date
    17 Apr 2013
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    11,651
    Downloads
    0
    Uploads
    0
    இங்கே நான் சொல்றது தப்பா இருக்கலாம் ....
    மனசுல எதன வைச்சு சொல்லுங்க ..இதுக்கு பேர் கதையா ?

  8. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Vinoth Kumar View Post
    இங்கே நான் சொல்றது தப்பா இருக்கலாம் ....
    மனசுல எதன வைச்சு சொல்லுங்க ..இதுக்கு பேர் கதையா ?
    நண்பரே... மன்றம் ஒரு எழுதுபலகை... கற்க விரும்புவோருக்குக் கைகொடுக்கும் ஒரு அற்புதக் கல்விக்கூடம். இதற்குப் பெயர் கதையா என்று கேட்பதை விடவும் இந்தக் கதை ஏன் உங்களைப் பொறுத்தவரை கதையாய்த் தோன்றவில்லை, இன்னும் எப்படி எழுதினால் முழுவடிவம் பெறுவதாக கருதுகிறீர்கள்... கதையின் குறைகளாய் எவற்றைக் காண்கிறீர்கள் என்று அலசி அவற்றை விமர்சிப்பதன் மூலம் நண்பருக்கு உதவலாமே...

  9. #7
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    நடைச்சுருக்கமான கதை!

    கதாநாயகன் நடையும் சுருக்கமானது.....
    கதையின் நடையும் ரத்தின சுருக்கமானது....

    "சரிங்க டாக்டர். உங்க பீஸ் என்ன?என் கிட்ட மொபைல் பாங்கிங்
    இருக்கு. இப்பவே உங்களுக்கு பணம் அனுப்பிடறேன். இல்லேன்னா
    இதுக்காக நான் ATM போகணும்" என்றான் பவ்யமாக..
    முத்தாய்ப்பாய் .... இருந்தாலும் திருந்தமாட்டோம் என உணர்த்தியுள்ளீர்கள்

    கரு... வளர்ந்து வரும் நாகரீக மாற்றத்தின் மறு(ரு)பக்கம்.
    என்றென்றும் நட்புடன்!

  10. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by Vinoth Kumar View Post
    இங்கே நான் சொல்றது தப்பா இருக்கலாம் ....
    மனசுல எதன வைச்சு சொல்லுங்க ..இதுக்கு பேர் கதையா ?
    நண்பரே என்றும் நாகரிகமான விமர்சனங்களுக்கு மதிப்பே தனி... உங்கள் விமர்சனம் எனக்கு
    மன உளைச்சலை ஏற்படுத்துகிறது . மன்றத்தின் புனிதம் கருதி தொடர்ந்து பேச விரும்பவில்லை.

  11. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    விமர்சனமே ஒரு படைப்பாளியை சிறந்த நிலைக்கு அழைத்து செல்கிறது, ஒவ்வொரு வாசகரும் படைப்பாளியை அந்நிலைக்கு அழைத்துச் செல்ல கடமை இருக்கிறது, அப்பணி ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். படைப்பாளியும் எவ்விதமான விமர்சனங்களை எதிர்க்கொள்ள வேண்டும் என்பதும் அவசியமே. விமர்சனங்கள் நம்மை உறுத்தாமல் வீருக்கொண்டு எழ உதவட்டும்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  12. Likes Vinoth Kumar, arun karthik liked this post
  13. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    மாறுபட்ட விமர்சனங்கள் உலாவரும் இம்மன்றத்தில் இது போன்ற விமர்சனங்களை ஒரு ஊக்கியாக கொண்டால் இது போன்ற தவறுகள் நிகழா அருண் கார்த்திக் ..தனது எண்ணங்களை துணிந்து கூறிய தோழர் வினோத்குமார் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ..காரணம் மனதில் தோன்றியவற்றை கூறாது மறைத்து காணாது செல்பவர்களை விட இது மேல் .ஆனால் அவர் கூறிய விதம் தவறு இதனை மாற்றி கொள்வது அவசியம் ..இது போன்று கூறுவதை விடுத்து ஏன் பிடிக்கவில்லை என்று கூறினால் தான குறைகளை களைய முடியும் வினோத் குமார்

    மாறுபட்ட கதை இருப்பினும் வரும் காலங்களில் நிகழாதென்று கூறவியலா ..மற்றொன்று சுருங்க கூறின் விளங்க வைத்தல் எனும் வகையில் இந்த கதை ..இன்னுமொரு வகையில் பார்த்தால் இது மரபுக்கவிதையின் சாயல் தெரிகிறது ..தொடருங்கள் அருண் கார்த்திக் ..

    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  14. Likes Vinoth Kumar, arun karthik liked this post
  15. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    "படைப்பாளியும் எவ்விதமான விமர்சனங்களை எதிர்க்கொள்ள வேண்டும் என்பதும் அவசியமே." "மாறுபட்ட விமர்சனங்கள் உலாவரும் இம்மன்றத்தில் இது போன்ற விமர்சனங்களை ஒரு ஊக்கியாக கொண்டால் இது போன்ற தவறுகள் நிகழா" மிகவும் சரியான சிந்தனை. தைனிஸ் மற்றும் நாஞ்சில் த.க.ஜெய்
    அவர்களுக்கு நன்றிகள்.வினோத் குமார் இந்த கதையின் கரு என்று நீங்கள் கருதுவது என்ன?இந்த கதையின் நடை
    அல்லது கரு அல்லது கதாபாத்திரம் இவற்றில் எது பிடிக்கவில்லை
    என்று கூறினால் அடுத்த கதை எழுத உதவியாக இருக்கும்.

  16. Likes A Thainis liked this post
  17. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    நன்றி கும்பகோணத்துப்பிள்ளை அவர்களே...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •