Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 21 of 21

Thread: இப்படித்தான் இன்றைய வாழ்க்கை

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    அருண் கார்த்திக், விமரிசனங்கள் நம்மை ஊக்குவிக்கவே. வருத்தப் படாதீர்கள். இந்த மன்றம் உயர்ந்த மனம் படைத்தவர், படித்தவர் நிறைய உள்ள ஒரு வலை தளம். கூடிய வரை யாரையும் புண் படுத்த தெரியாது. அதே சமயம சொல் சுதந்திரம் உள்ள இடம். எனவே, எதையும் நல்ல கருத்தாகவே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இடத்தில், நானும் ஒரு மூன்று மாதம் முன்பு விமரிசனம் பெற்றிருக்கிறேன்( எனது நான்காவது கதை). அதுவே எனக்கு மேலும் ஒரு உற்சாகத்தை கொடுத்தது. உங்கள் கதை அருமை என்று சொன்னாலும் ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்.அது உங்களை ஊக்குவிக்கவே. தண்டம் என்றாலும் வருத்தப் படாதீர்கள். அதுவும் ஊக்குவிக்கவே.

    உங்கள் கதை நன்றாகவே இருந்தது. புதிய கற்பனை. எதை பற்றியும் கவலை படாமல் போய்க்கிட்டே இருங்க. நிறைய எழுதுங்கள். சித்திரமும் கை பழக்கம் தானே.

  2. Likes prakash01, arun karthik, Vinoth Kumar liked this post
  3. #14
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    கார்த்திக், உங்கள் கதை படிக்கும்போது நல்ல தம்பி படத்தில் N.S.கிருஷ்ணன் - T.A.மதுரம் பாடிய பாடல் தான் நினைவுக்கு வந்தது ( நன்றி கூகிள்)

    "
    விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி
    தேனாண்டாளை விருந்துக்கழைச்சு காட்டப் போறேண்டி
    ...
    பொஞ்சாதி, புருஷன் இல்லாம
    புள்ளையும், குட்டியும் பொறக்குறாப்புல

    (விஞ்ஞானத்த i)

    ...

    .வீட்டுக்கென்ன செய்ய போறீங்க, அதையும் கொஞ்சம் வெவரமாக விளக்கிப்போடுங்க...

    நெல்லுகுத்த, மாவரைக்க, நீர் இறைக்க மிஷினு
    அல்லும்,பகலும் அரிசி அரைக்க அதுக்கொரு மிஷினு,

    கொல்ல புரத்தில குழாய் வைக்கணும், குளிரு மிஷினும் கூட வைக்கணும், பள்ளிக்கூடத்துக்கு புள்ளைங்க போனாலே படிக்க கருவி பண்ணியும் வைக்கணும்..

    முடிஞ்சுதா?.

    ஒண்ணை மறந்துட்டேன்
    பட்டனை தட்டி விட்டா ரெண்டு தட்டிலே
    இட்டிலியும், காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்

    கட்டிலுக்கு மேலே பேன் காத்து சுத்தணும்
    காலம் காட்டும் கருவியும் வேணும்

    ஹா...ஹா.....ஹா............

    அடி பைத்தியம் !
    நம்ம நாட்டிலே
    வீட்டு வேலை செஞ்ச பொம்மனாட்டிய பாரு
    மேனாட்டு நாகரீகம் கொண்ட மேனியைப் பாரு

    அவ காட்டுக்கு போவா
    களை எடுப்பா
    காரியம் பாப்பா
    கஞ்சி குடிப்பா

    இவ கார்ல போவா
    ஊரைச் சுத்துவா
    கண்ணாடி பாப்பா
    காப்பி குடிப்பா !!

  4. #15
    புதியவர்
    Join Date
    17 Apr 2013
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    11,651
    Downloads
    0
    Uploads
    0
    அன்பு நண்பருக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இவனதன்று .
    அப்படி அந்த வரிகள் தங்களை அழைத்து போயிருந்தால் அதற்கு உங்களுக்கு நீங்களே சமரசம் செய்து கொள்ளுங்கள் .
    எழுதியவர்கள்/ படைப்பாளிகள் எப்பொழுதுமே நல்ல விமர்சனங்களை மட்டுமே எதிர் பார்க்க கூடாது என்பது என்னுடைய மிக தாழ்மையான கருத்து ..
    அடித்து பார்க்கும் விமர்சனங்கள் கூட படைப்பாளியை மென்மேலும் உயர்த்தும் ..
    நன்றி

  5. Likes A Thainis liked this post
  6. #16
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    44
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,114
    Downloads
    0
    Uploads
    0
    நண்பர்கள் அருண் கார்த்திக் மற்றும் வினோத் குமார் இருவரும், ஒரு ஆரோக்கியமான புரிதலில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி, உங்களது தொடர் பங்களிப்பால் மன்றமும் தமிழும் சிறக்க வாழ்த்துக்கள்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  7. #17
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    இது போன்ற விமர்சனங்களை நான் எதிர் கொள்வது இது தான்
    முதல் முறை. அதனால் எனக்கு எப்படி எதிர் செயலாற்ற வேண்டும்
    என்று தெரியவில்லை. மன்ற நண்பர்கள் உணர வைத்தமைக்கு
    நன்றி.மன உளைச்சல் இப்போது துளியும் இல்லை. நன்றிகள் வினோத் குமார். தங்களால் இனி யார் என்ன விமர்சனம்
    செய்தாலும் எதிர் கொள்ளத் தயாராகி விட்டேன். ஆனால் தங்கள்
    விமர்சனம் அடித்து பேசுவதை விட ஆரோக்கியமாக இருக்கும்
    பட்சத்தில் அது படைப்பாளிகளை ஏற்றுவிக்கும் ஏணியாக இருக்கும். தொடரட்டும்
    தங்கள் பின்னூட்டங்கள்...

  8. #18
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    முரளி தாங்கள் மிகவும் சிரமம் பார்த்து தேடிய பாடல் உண்மையின் யதார்த்தம். சொகுசான வாழ்க்கைக்கும் யதார்த்த வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது. இனி நிச்சயம் எத்தகு விமர்சனங்களையும் நன்றாகவே எடுத்து செல்வேன்."வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே". சரிதானே....

  9. Likes முரளி, prakash01 liked this post
  10. #19
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    இரவு எட்டரை மணிக்கு நான் வீடு திரும்பும்போது தினமும் காணும் ஒரு காட்சி:

    ஜிம்மில் வயதில் குறைந்த இரு பாலினரும் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து கொண்டு இருப்பதை.

    ஆனால் நான் தனிப்பட்ட முறையில் விசாரித்த வரையில் இந்த வயதில் உள்ளவர்கள் வீட்டில் அம்மாவுக்கு எந்த உதவியும் செய்வது கிடையாது.

    வீட்டு வேலைகளும் நடை பயிற்சியும் மிகவும் குறைந்து விட்டதால் வைத்தியருக்குத்தான் கொண்டாட்டம்.

    இதை புரிந்து கொள்ள

    நமது கொள்ளு பாட்டியை விட பாட்டியும்,
    பாட்டியை விட அம்மாவும்,
    அம்மாவை விட மனைவியும்,
    மனைவியை விட மகளும்

    சீக்கிரமக பல உடல் உபாதைகளை அனுபவிப்பதை பார்க்க வேண்டும்.

    அறிவியல் முன்னேற்றங்களால் கிடைக்கும் உபகரணங்களைப் பயன் படுத்தும் போது, நமது உடல் நலத்தில் அக்கறையோடு உடல் உழைப்பையும் செய்து வந்தால் வரும் காலத்திலாவது பொதுவாக உடல் நலம் மேம்படும்.

    இதை உணர்ந்து எல்லோரும் செயல் படுவார்களா ?

    பதிவுக்கு நன்றி.

    மும்பை நாதன்

  11. Likes சிவா.ஜி liked this post
  12. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    முகபுத்தகத்தில் கண்டது..
    “ஏழை வயிற்றை வளர்க்க ஓடுகிறான்...
    பணக்காரன் வயிற்றை குறைக்க ஓடுகிறான்..”
    -இதுல இருந்து ஓடுடறத நிறுத்துனா உடம்புக்கு நல்லதில்லைங்கிறது மட்டும் புரியுது... இந்த யதார்த்தத்தை வெகுஇயல்பா கதையில் சொல்லியிருக்கீங்க... வாழ்த்துக்கள் அருண்கார்த்திக்.. தொடர்ந்து எழுதுங்க..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  13. #21
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எதார்த்தத்தை சொல்லும் குறுங்கதை. வார்த்தைக் கோர்ப்புகளில் இன்னும் கொஞ்சம் கவனம் சேர்த்திருந்தால் மிக அருமையாய் வந்திருக்கும்.

    நல்ல கரு....அருமை.
    கையாண்ட விதம்....சுமார்.

    வாழ்த்துக்கள் அருண்.

    (சேவலின் கூவலை அறைகூவல் எனச் சொல்லியிருப்பது சரியல்ல அருண். அறைகூவல் என்பது எதிரியை சண்டைக்கு அழைப்பது)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  14. Likes arun karthik liked this post
Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •