அருண் கார்த்திக், விமரிசனங்கள் நம்மை ஊக்குவிக்கவே. வருத்தப் படாதீர்கள். இந்த மன்றம் உயர்ந்த மனம் படைத்தவர், படித்தவர் நிறைய உள்ள ஒரு வலை தளம். கூடிய வரை யாரையும் புண் படுத்த தெரியாது. அதே சமயம சொல் சுதந்திரம் உள்ள இடம். எனவே, எதையும் நல்ல கருத்தாகவே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இடத்தில், நானும் ஒரு மூன்று மாதம் முன்பு விமரிசனம் பெற்றிருக்கிறேன்( எனது நான்காவது கதை). அதுவே எனக்கு மேலும் ஒரு உற்சாகத்தை கொடுத்தது. உங்கள் கதை அருமை என்று சொன்னாலும் ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்.அது உங்களை ஊக்குவிக்கவே. தண்டம் என்றாலும் வருத்தப் படாதீர்கள். அதுவும் ஊக்குவிக்கவே.
உங்கள் கதை நன்றாகவே இருந்தது. புதிய கற்பனை. எதை பற்றியும் கவலை படாமல் போய்க்கிட்டே இருங்க. நிறைய எழுதுங்கள். சித்திரமும் கை பழக்கம் தானே.
Bookmarks