இனிஎன்றும் இணைபிரியாக் காதலர் ஆனோம்
......இப்புவியின் இன்பங்கள் நமக்கே சொந்தம்
தனிமையிலே உன்னுடனே இருக்கும் வேளை
......தகிக்கின்ற பாலைவனம் சொர்க்கம் ஆகும்
பனிபெய்யும் மார்கழியின் குளிரைப் போலே
......பாவையுனை அணைக்கையிலே இன்பம் தோன்றும்
கனிகொடுக்கும் இனிப்பெல்லாம் என்றும் வேண்டேன்
......கற்கண்டுச் செவ்விதழே எனக்குப் போதும்.
Bookmarks