ஆங்கிலம் பேசும் நாட்டில் வாழும் நான் தமிழுக்காக ஏங்கி தவித்து தேடிய போது கிடைத்த தமிழ்மன்றத்தில் என்னையும் இணைத்து கொண்டேன். இப்படி ஒரு மன்றத்தை உருவாக்கி போற்றி வளர்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நன்றி வணக்கம்.
என் பெயர் யாழினி. மன்றத்தில் சேர்ந்து பல மாதங்கள் ஆனாலும் பின் இருக்கையில் அமர்ந்து உங்கள் தமிழை பருகி கொண்டிருந்தேனே தவிர பெரிதாக பதிவிட்டதில்லை. இனி அடிக்கடி நம் மன்றத்திற்கு வந்து இழைகளில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.
நான் இப்போது கூகுள் மேகக்கணினி மூலம் தமிழை தட்டச்சு செய்து பதிவிடுகிறேன். நமது மன்றத்து தளத்திலேயே தமிழில் பதிவிட செய்முறைகள் என்ன என்று விளக்கினால் மிகவும் நன்றி உள்ளவளாக இருப்பேன். எனது அறியாமையை மன்னிக்கவும். மீண்டும் அனைவருக்கும் வணக்கம்.
Bookmarks