கதறியது குழந்தை
தாயும் தந்தையும்
பரிதவிக்க
அக்கம் பக்கம்
அலறி விழிக்க
காரணம் வலி? பசி?
இல்லை இல்லை
மின்சாரம்
இப்பாவம் யாரைப் போய்ச் சேரும்?
கதறியது குழந்தை
தாயும் தந்தையும்
பரிதவிக்க
அக்கம் பக்கம்
அலறி விழிக்க
காரணம் வலி? பசி?
இல்லை இல்லை
மின்சாரம்
இப்பாவம் யாரைப் போய்ச் சேரும்?
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
குழந்தை பிறந்தநாளிலிருந்து மின்விசிறியைப் பழக்கப்படுத்திய நம்மைத்தான் சாரும்.
வெட்டவெளியில் மரத்தடித் தூளியில் உறங்கும் குழந்தை தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் எழாமல் ஆழ்ந்துறங்குவது அது வாங்கிவந்த வரம் என்றுதான் சொல்லவேண்டும். (நாமும் நம் குழந்தைகளும் நள்ளிரவில் மின்சாரமில்லாமல் அவதிப்படுவதாக! என்று யாரிடமோ சாபம் வாங்கியிருப்போமோ?)
தென்றல் வந்து தீண்டுமென்றா
தெருவோரம் உறங்குகின்றார்
வீதிவாழ் விதி கொண்ட ஏழைக்குழந்தைகள்!
மயிலுக்கு துகில் கொடுத்த பேகன் வந்து
போர்துவானென்றா பாதையோரம்
படுத்துக்கிடக்கறார்கள் பாவமற்ற ஏழைகள்!
மின்சாரம் இருந்தபோது அவர்களிடம்
மினவிசிறியில்லை!
மின்சாரம் இல்லாதபோதோ!...
தகவல்: 11 மில்லியன் குழந்தைகள் இந்தியாவின் தெருவோரங்களில் வசிக்கிறார்கள்
"https://groups.google.com/forum/#!msg/keetru/HJpv2CbEwdE/XwFkHl1ViGEJ"]https://groups.google.com/forum/#!msg/keetru/HJpv2CbEwdE/XwFkHl1ViGEJ[/URL]
Last edited by கும்பகோணத்துப்பிள்ளை; 02-05-2013 at 02:35 PM.
என்றென்றும் நட்புடன்!
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால்பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் திரண்டாலும் தீபம் எரிந்தாலும்
எழைகள் வாழ்வது கண்ணீரிலே
என்ற அர்த்தமுள்ள திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது.
வீடு கட்ட மரம், ரோடு போட தேவையில்லை மரம் ,படிக்கும் பேப்பர் க்கு வேண்டும் மரம் ,இப்படியிருந்தால் காற்றினை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் ..இது போன்ற நேரங்களில் வெளியில் வந்தால் மரங்களிலிருந்து வீசும் காற்று அவசியப்படும் அதனை ரசிக்க ஒரு வாய்ப்பு தந்தமைக்கு ஒரு நன்றி கூறி குழந்தையினை இந்த தென்றல் காற்றினூடே தலாட்டி தூங்க வைத்து அதன் அருமையினை உணர வையுங்கள் ..வளரும் சந்ததியினர் அதன் அவசியம் உணர்வர் ...தொடருங்கள் நிவாஸ் ..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
உண்மைதாங்க, நவநாகரீகம் என்னும் பெயரில் நம் வாழ்க்கை மாற்றத்தில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள இயலாத ஒரு இயலாமை நிலையை அடைந்துள்ளோம் என்பதே மறுக்க இயலாத மறைக்கப் படுகிற உண்மையாகும். இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தவரை மனிதன் வலிமையாய் இருந்தான், இன்று அறிவியலை மட்டும் மனிதன் நம்பி வாழ்வதால் அது பொருளாதாரத்துக்குள் அடைபட்டுவிட வசதி அனைவருக்கும் எட்டாக் கனியாகிவிடுகிறது. பாவம் அந்த குழந்தை என்ன செய்ய இயலும்.
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
தவறு யாருடையதாக இருப்பினும் குழந்தைகளால் அதை அறிந்து உணர்ந்து புரிந்து மனதை தேற்றி சகித்துக்கொள்ள இயலாது பாவம்
மிக்க நன்றி ரமணி
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks